ஆளுநரிடம் கொடுத்த மனுவில் என்ன உள்ளது?– கரு.நாகராஜன் விளக்கம்
Aug 26, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநரிடம் கொடுத்த மனுவில் என்ன உள்ளது?– கரு.நாகராஜன் விளக்கம்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 7, 2023, 06:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனாதனம் குறித்து வெறுப்புப் பிரச்சாரம் செய்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநரிடம் தமிழக பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழக பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் செப்.07-ம் தேதி (இன்று) சந்தித்தனர். அப்போது, அவர்கள் ஆளுநரிடம் 2 கடிதங்களை வழங்கினர்.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, சனாதனத்தை ஒழிப்போம் என்று, உலகம் முழுவதும் வாழும் 130 கோடி இந்துக்களை புண்படுத்தும் விதமாக அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.

சனாதனத்தை ஒழிப்போம் என்பதே, இந்துக்களை ஒழிப்போம் என்று கூறுவதாகத்தான் அர்த்தம். இந்து தெய்வங்களை வணங்கும் நபர்களை எதிர்ப்போம், ஒழிப்போம் என்பதுதான் அதன் பொருள். தமிழகத்தில் உள்ள 8 கோடி இந்துக்களை ஒழிப்போம் என்றுதான் அதற்கு அர்த்தம்.

கடவுள் நம்பிக்கை நிறைந்த மாநிலம் தமிழகம். உலகத்துக்கே வழிகாட்டும் மாநிலமும் தமிழகம்தான். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த தமிழகத்தில் இருந்து கொண்டு, அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, அந்த உறுதிமொழிக்கு எதிராக உதயநிதி நடந்து கொண்டுள்ளார்.

இது வன்முறை என்ற நஞ்சை விதைக்கும் பேச்சு. எனவே, அமைச்சர் பதவி வகிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை. எனவே, அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எங்களது மாநிலத் தலைவரின் கடிதத்தை, ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.

அதேபோல், இந்து சமய அறநிலையத்துறையில் இருப்பவர்கள் இந்துக்களாக இருக்கவேண்டும் என்று விதி உள்ளது. இந்து மதத்துக்கு எதிராகவோ, மத உணர்வுகளுக்கு எதிராகவோ செயல்படமாட்டேன் என்று அதிகாரிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அதிகாரிகளே உறுதிமொழி எடுக்கும்போது, அந்த துறையின் அமைச்சர் எவ்வளவு பொறுப்புள்ள நபராக இருக்க வேண்டும். இது அமைச்சர் சேகர் பாபுவுக்கு தெரியவில்லை.

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபுவும் கலந்து கொண்டது தவறு. எனவே, சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.

Tags: bjp annamalaibjp tamilnadugoverner ravirajbhavan
Share
Tweet
SendShare
Previous Post

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.4 – மகிழ்ச்சியில் பொதுமக்கள்

Next Post

உதயநிதியை நாடே வெறுக்கிறது!

Related News

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies