நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!
Oct 26, 2025, 05:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு வழக்கில் நீதிபதி வேதனை!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணையின்போது, நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி வேதனை தெரிவித்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீண்டகாலமாக நடந்து வரும் பல்வேறு வழக்குகளில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி, அமைச்சர்கள் விடுவிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதையடுத்து, விடுவிக்கப்படும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை மறு ஆய்வு செய்ய, தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து வருகிறது.

அந்த வகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றத்தால் தி.மு.க.வைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மறு ஆய்வு செய்வதாகக் கூறி, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

அதேபோல, தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக, தொடரப்பட்ட வழக்கில் இருந்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கையும் நீதிபதி வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. இந்த வழக்கை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை.

மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கைப் பொறுத்தவரை, விடுவிக்கக் கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது.

கீழமை நீதிமன்றங்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று வேதனை தெரிவித்த நீதிபதி, “இந்த வழக்குகளின் மறு ஆய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கிறார்கள். ஆனந்த் வெங்கடேஷ் தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: DMKMinistercondemnI.PeriyasamyCaseJudge
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 50% டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை!

Next Post

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies