நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!
Jan 14, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு வழக்கில் நீதிபதி வேதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணையின்போது, நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி வேதனை தெரிவித்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீண்டகாலமாக நடந்து வரும் பல்வேறு வழக்குகளில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி, அமைச்சர்கள் விடுவிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதையடுத்து, விடுவிக்கப்படும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை மறு ஆய்வு செய்ய, தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து வருகிறது.

அந்த வகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றத்தால் தி.மு.க.வைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மறு ஆய்வு செய்வதாகக் கூறி, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

அதேபோல, தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக, தொடரப்பட்ட வழக்கில் இருந்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கையும் நீதிபதி வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. இந்த வழக்கை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை.

மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கைப் பொறுத்தவரை, விடுவிக்கக் கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது.

கீழமை நீதிமன்றங்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று வேதனை தெரிவித்த நீதிபதி, “இந்த வழக்குகளின் மறு ஆய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கிறார்கள். ஆனந்த் வெங்கடேஷ் தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: DMKMinistercondemnI.PeriyasamyCaseJudge
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 50% டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை!

Next Post

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies