நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!
Jul 25, 2025, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு வழக்கில் நீதிபதி வேதனை!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணையின்போது, நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி வேதனை தெரிவித்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீண்டகாலமாக நடந்து வரும் பல்வேறு வழக்குகளில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி, அமைச்சர்கள் விடுவிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதையடுத்து, விடுவிக்கப்படும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை மறு ஆய்வு செய்ய, தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து வருகிறது.

அந்த வகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றத்தால் தி.மு.க.வைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மறு ஆய்வு செய்வதாகக் கூறி, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

அதேபோல, தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக, தொடரப்பட்ட வழக்கில் இருந்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கையும் நீதிபதி வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. இந்த வழக்கை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை.

மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கைப் பொறுத்தவரை, விடுவிக்கக் கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது.

கீழமை நீதிமன்றங்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று வேதனை தெரிவித்த நீதிபதி, “இந்த வழக்குகளின் மறு ஆய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கிறார்கள். ஆனந்த் வெங்கடேஷ் தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: JudgeDMKMinistercondemnI.PeriyasamyCase
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 50% டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை!

Next Post

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies