நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!
Sep 12, 2026, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு வழக்கில் நீதிபதி வேதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 05:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணையின்போது, நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி வேதனை தெரிவித்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீண்டகாலமாக நடந்து வரும் பல்வேறு வழக்குகளில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி, அமைச்சர்கள் விடுவிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதையடுத்து, விடுவிக்கப்படும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை மறு ஆய்வு செய்ய, தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து வருகிறது.

அந்த வகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றத்தால் தி.மு.க.வைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மறு ஆய்வு செய்வதாகக் கூறி, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

அதேபோல, தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக, தொடரப்பட்ட வழக்கில் இருந்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கையும் நீதிபதி வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. இந்த வழக்கை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை.

மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கைப் பொறுத்தவரை, விடுவிக்கக் கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது.

கீழமை நீதிமன்றங்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று வேதனை தெரிவித்த நீதிபதி, “இந்த வழக்குகளின் மறு ஆய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கிறார்கள். ஆனந்த் வெங்கடேஷ் தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: DMKMinistercondemnI.PeriyasamyCaseJudge
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் 50% டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை!

Next Post

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies