ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!
Mar 15, 2026, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!

தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் பச்சைக்கொடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 9, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதியில் மேலும் 4 வாரங்கள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்துக்களின் புண்ணிய பூமியாகக் கருதப்படும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதன் எதிரே ஒளரங்க சீப் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இஸ்லாமியர்களின் ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதியின் சுற்றுச்சுவரில் சிருங்கார கௌரி அம்மன் சிலை அமைந்திருக்கிறது. இச்சிலையை நாள்தோறும் வழிபட அனுமதி அளிக்கக் கோரி 5 இந்துப் பெண்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் ஞானவாபி மசூதிக்குள் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இத்தனை ஆண்டுகளாக இதற்காகத்தான் காசி விஸ்வநாதர் கோவிலில் நந்தி பெருமான் காத்திருக்கிறார் என்று கூறிய இந்துக்கள், சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு உட்படுத்தக் கோரிக்கை விடுத்தனர். இதற்கு, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மசூதி நிர்வாகம் அலகபாத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வாரணாசி நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. எனவே, மசூதி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதுவும் பலனளிக்காத நிலையில், வாரணாசி நீதிமன்ற உத்தரப்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வுக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 8 வார காலம் அவகாசம் கோரி, தொல்லியல் துறைத் தரப்பில் கடந்த 2-ம் தேதி வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், தொல்லியல் துறைக்கு மேலும் 4 வார காலம் அவகாசம் வழங்கி அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி அக்டோபர் 6-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: varanasignanawabimasjidsurveyarcheologyextended
ShareTweetSendShare
Previous Post

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 300-க்கும் மேற்பட்டோர் பலி!

Next Post

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies