ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!
Sep 9, 2025, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!

தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் பச்சைக்கொடி!

Web Desk by Web Desk
Sep 9, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதியில் மேலும் 4 வாரங்கள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்துக்களின் புண்ணிய பூமியாகக் கருதப்படும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதன் எதிரே ஒளரங்க சீப் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இஸ்லாமியர்களின் ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதியின் சுற்றுச்சுவரில் சிருங்கார கௌரி அம்மன் சிலை அமைந்திருக்கிறது. இச்சிலையை நாள்தோறும் வழிபட அனுமதி அளிக்கக் கோரி 5 இந்துப் பெண்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் ஞானவாபி மசூதிக்குள் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இத்தனை ஆண்டுகளாக இதற்காகத்தான் காசி விஸ்வநாதர் கோவிலில் நந்தி பெருமான் காத்திருக்கிறார் என்று கூறிய இந்துக்கள், சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு உட்படுத்தக் கோரிக்கை விடுத்தனர். இதற்கு, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மசூதி நிர்வாகம் அலகபாத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வாரணாசி நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. எனவே, மசூதி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதுவும் பலனளிக்காத நிலையில், வாரணாசி நீதிமன்ற உத்தரப்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வுக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 8 வார காலம் அவகாசம் கோரி, தொல்லியல் துறைத் தரப்பில் கடந்த 2-ம் தேதி வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், தொல்லியல் துறைக்கு மேலும் 4 வார காலம் அவகாசம் வழங்கி அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி அக்டோபர் 6-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: varanasignanawabimasjidsurveyarcheologyextended
ShareTweetSendShare
Previous Post

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 300-க்கும் மேற்பட்டோர் பலி!

Next Post

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

Related News

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies