உரலார்... உலக்கையார்... உதயநிதிக்கு பதிலடி!
Jan 14, 2026, 02:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உரலார்… உலக்கையார்… உதயநிதிக்கு பதிலடி!

சனாதனம் விவகாரத்தில் இலங்கை ஜெயராஜ் அதிரடி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இலக்கியவாதியும், சமய பேச்சாளருமான இலங்கை ஜெயராஜ், உரலார், உலக்கையார் பாணியில் வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த, இடதுசாரி அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கக் கூடிய, இந்துக்கள், இந்து அமைப்புகள் மற்றும் ஆன்மிக அன்பர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உதயநிதிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்திருக்கிறார். இது தவிர, உதயநிதி மீது அம்மாநிலத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, முக்கியப் பிரமுகர்கள் ஏராளமானோர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், உதயநிதிக்கு இலங்கையைச் சேர்ந்த இலக்கியம் மற்றும் சமயப் பேச்சாளரான கம்பவாரிதி ஜெயராஜ், உரலார்… உலக்கையார்… சல்லடையார் பாணியில், வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

உரலார் கேள்வி: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்களே?

உலக்கையார் பதில் : சுருக்கமாய்ச் சொன்னால் தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். சொல்கிறவர்களுக்குத் தர்மம் இடையூறு செய்கிறது போல. தர்மம் என்கின்ற இவர்களின் செயல்கள் அடங்க மறுக்கிறது. அதனால், ‘பிரேம்’ஐ உடைத்துவிட்டால் எல்லைகள் இன்றித் தாம் செயல்படலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். வரலாற்று அனுபவங்களை உணர மறுக்கும் இவர்தம்மை என்சொல்ல? முருகனை ஒழிக்க நினைத்த சூரன் தான் ஒழிந்து போனான். நரசிம்மரை ஒழிக்க நினைத்த இரணியன் தான் ஒழிந்து போனான். இராமனை ஒழிக்க நினைத்த இராவணன் தான் ஒழிந்து போனான். தர்மத்தை ஒழிக்க நினைக்கிறவர்கள் கதையெல்லாம் இப்படித்தான் முடியும்.

சல்லடையாரின் சலிப்பு: ‘தம்பிக்கு அனுபவம் போதாதுங்கோ! ஹீ..ஹீ.. ஹி…!’ என்று முடித்திருக்கிறார். இவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: srilankasanatan dharmaUdayanithiJeyaraj
ShareTweetSendShare
Previous Post

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டம் தொடக்கம்!

Next Post

உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies