உரலார்... உலக்கையார்... உதயநிதிக்கு பதிலடி!
Oct 26, 2025, 09:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உரலார்… உலக்கையார்… உதயநிதிக்கு பதிலடி!

சனாதனம் விவகாரத்தில் இலங்கை ஜெயராஜ் அதிரடி

Web Desk by Web Desk
Sep 10, 2023, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இலக்கியவாதியும், சமய பேச்சாளருமான இலங்கை ஜெயராஜ், உரலார், உலக்கையார் பாணியில் வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த, இடதுசாரி அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கக் கூடிய, இந்துக்கள், இந்து அமைப்புகள் மற்றும் ஆன்மிக அன்பர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உதயநிதிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்திருக்கிறார். இது தவிர, உதயநிதி மீது அம்மாநிலத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, முக்கியப் பிரமுகர்கள் ஏராளமானோர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், உதயநிதிக்கு இலங்கையைச் சேர்ந்த இலக்கியம் மற்றும் சமயப் பேச்சாளரான கம்பவாரிதி ஜெயராஜ், உரலார்… உலக்கையார்… சல்லடையார் பாணியில், வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

உரலார் கேள்வி: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்களே?

உலக்கையார் பதில் : சுருக்கமாய்ச் சொன்னால் தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். சொல்கிறவர்களுக்குத் தர்மம் இடையூறு செய்கிறது போல. தர்மம் என்கின்ற இவர்களின் செயல்கள் அடங்க மறுக்கிறது. அதனால், ‘பிரேம்’ஐ உடைத்துவிட்டால் எல்லைகள் இன்றித் தாம் செயல்படலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். வரலாற்று அனுபவங்களை உணர மறுக்கும் இவர்தம்மை என்சொல்ல? முருகனை ஒழிக்க நினைத்த சூரன் தான் ஒழிந்து போனான். நரசிம்மரை ஒழிக்க நினைத்த இரணியன் தான் ஒழிந்து போனான். இராமனை ஒழிக்க நினைத்த இராவணன் தான் ஒழிந்து போனான். தர்மத்தை ஒழிக்க நினைக்கிறவர்கள் கதையெல்லாம் இப்படித்தான் முடியும்.

சல்லடையாரின் சலிப்பு: ‘தம்பிக்கு அனுபவம் போதாதுங்கோ! ஹீ..ஹீ.. ஹி…!’ என்று முடித்திருக்கிறார். இவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: srilankasanatan dharmaUdayanithiJeyaraj
ShareTweetSendShare
Previous Post

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டம் தொடக்கம்!

Next Post

உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து!

Related News

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies