பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்!
Jul 25, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி மனுத் தாக்கல்!

Web Desk by Web Desk
Sep 10, 2023, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், தன்னையும் ஒரு மனுதாரராகச் சேர்த்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிம வளத்துறையையும் தனது வசம் வைத்திருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூந்துறை கிராமத்தில் அனுமதியை மீறி 2,64,644 லோடு லாரிகள் செம்மண் எடுத்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு 28,36,40,600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இப்புகாரின் பேரில், கடந்த 2012-ம் ஆண்டில் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 11 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், செம்மண் குவாரி முறைகேட்டில், பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சாட்சிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு, 10-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் பலர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் எப்படி சாட்சி சொல்வார்கள்? எனவே, அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: new writvillupuram courtADMKMinister Ponmudisand quarryscam caseex ministerjeyakumar
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாளில் 53,836 வழக்குகளுக்குத் தீர்வு!

Next Post

தமிழக அரசுக்கு எதிராக தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies