பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்!
Oct 26, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி மனுத் தாக்கல்!

Web Desk by Web Desk
Sep 10, 2023, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், தன்னையும் ஒரு மனுதாரராகச் சேர்த்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிம வளத்துறையையும் தனது வசம் வைத்திருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூந்துறை கிராமத்தில் அனுமதியை மீறி 2,64,644 லோடு லாரிகள் செம்மண் எடுத்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு 28,36,40,600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இப்புகாரின் பேரில், கடந்த 2012-ம் ஆண்டில் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 11 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், செம்மண் குவாரி முறைகேட்டில், பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சாட்சிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு, 10-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் பலர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் எப்படி சாட்சி சொல்வார்கள்? எனவே, அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: new writvillupuram courtADMKMinister Ponmudisand quarryscam caseex ministerjeyakumar
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாளில் 53,836 வழக்குகளுக்குத் தீர்வு!

Next Post

தமிழக அரசுக்கு எதிராக தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்!

Related News

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

TVS புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது!

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies