ஒரே நாளில் 53,836 வழக்குகளுக்குத் தீர்வு!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாளில் 53,836 வழக்குகளுக்குத் தீர்வு!

தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டன!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 03:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில், நிலுவையிலிருந்த 53,836 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன.

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகப்படியாகத் தேங்குவதைத் தவிர்ப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எளிதாகத் தீர்வுகாணவும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் உதவுகிறது. ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் தங்களது வழக்குகளைச் சமரசமாகத் தீர்த்துக்கொள்ளலாம்.

இதில், நிலுவையில் உள்ள வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வங்கிக் கடன், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்கு , சிவில் வழக்கு உள்ளிட்ட வழக்குகளுக்குச் சமரசம் செய்யப்பட்டுத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குக் காசோலைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா வழிகாட்டுதலின் படி, மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், சி.சரவணன் ஆகியோர் மேற்பார்வையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் லோக் அதாலத் நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்திரசேகரன், தமிழ்செல்வி, முகமது சபீக், சத்யநாராயண பிரசாத், என்.மாலா, சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி, இலட்சுமிநாராயணன், இராஜசேகர் ஆகியோர் தலைமையில் பத்து அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஐந்து அமர்வுகளும் அமைக்கப்பட்டு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன.

இதில், 1,250 வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில், 108 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு, 13 கோடியே 30 இலட்சம் நிவாரணம் கிடைக்கப் பெற்றது. இதேபோல், மாநிலம் முழுவதும் மாவட்டம், வட்டம் வாரியாக நீதிபதிகள் தலைமையில் 440 அமர்வுகள் அமைக்கப்பட்டு, 53,836 வழக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம், 323 கோடியே 85 இலட்சம் ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கிடைத்துள்ளது.

Tags: tamilnadulok adalat53836 casessolved
Share
Tweet
SendShare
Previous Post

ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்து தூவும் பணி!

Next Post

பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies