கோவில் நிலத்தை மீட்க கையெழுத்து இயக்கம்!
Mar 15, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் நிலத்தை மீட்க கையெழுத்து இயக்கம்!

திருப்பூரில் இந்து முன்னணி அதிரடி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே உள்ள அருள்மிகு திருமுருகன் பூண்டி திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கும் அதிகமாக ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரி, இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருமுருகன் பூண்டி. முருகனால் இத்தலத்துச் சிவபெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்துத் தனிச்சிறப்பாக காணப்படுகிறது. இதற்குச் சான்றாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்றும் அமைந்துள்ளது.

முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, திருக்கோவிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் தனது வேலை ஊன்றி, அருகிலேயே மயில் வாகனத்தையும் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார் என்பது திருக்கோவிலின் தனிச்சிறப்பு. பெரும்பாலான திருக்கோவில்களில், சுப்பிரமணியர் சிலை, முன்புறம் 3 முகங்களும், பின்புறம் 3 முகங்களுடனும் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மட்டும் 5 முகங்கள் முன்புறமும், 6-வது முகம் பின்புறமும் அமைந்துள்ளது.

இதனை, அதோ முகம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த முகத்தைக் கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு, அதோ முகத்தைப் பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவிலுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆகவே, திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தை அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, நிலத்தை மீட்கக் கோரி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பக்தர்களிடமும், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த முயற்சிக்கு ஆன்மீக அன்பர்களும், பக்தர்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

Tags: TiruppurMurugan Templeencroachmenthindu mannaniSignature movement
ShareTweetSendShare
Previous Post

மாசாணியம்மன் கோவில் வசூல் ரூ.1.34 கோடி!

Next Post

உதயநிதியை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies