கோவில் நிலத்தை மீட்க கையெழுத்து இயக்கம்!
Sep 14, 2025, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் நிலத்தை மீட்க கையெழுத்து இயக்கம்!

திருப்பூரில் இந்து முன்னணி அதிரடி

Web Desk by Web Desk
Sep 10, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே உள்ள அருள்மிகு திருமுருகன் பூண்டி திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கும் அதிகமாக ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரி, இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருமுருகன் பூண்டி. முருகனால் இத்தலத்துச் சிவபெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்துத் தனிச்சிறப்பாக காணப்படுகிறது. இதற்குச் சான்றாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்றும் அமைந்துள்ளது.

முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, திருக்கோவிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் தனது வேலை ஊன்றி, அருகிலேயே மயில் வாகனத்தையும் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார் என்பது திருக்கோவிலின் தனிச்சிறப்பு. பெரும்பாலான திருக்கோவில்களில், சுப்பிரமணியர் சிலை, முன்புறம் 3 முகங்களும், பின்புறம் 3 முகங்களுடனும் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மட்டும் 5 முகங்கள் முன்புறமும், 6-வது முகம் பின்புறமும் அமைந்துள்ளது.

இதனை, அதோ முகம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த முகத்தைக் கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு, அதோ முகத்தைப் பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவிலுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆகவே, திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தை அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, நிலத்தை மீட்கக் கோரி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பக்தர்களிடமும், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த முயற்சிக்கு ஆன்மீக அன்பர்களும், பக்தர்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

Tags: TiruppurMurugan Templeencroachmenthindu mannaniSignature movement
ShareTweetSendShare
Previous Post

மாசாணியம்மன் கோவில் வசூல் ரூ.1.34 கோடி!

Next Post

உதயநிதியை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

Related News

பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தார் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

பட்டியலின ஊராட்சி மன்ற துணை தலைவரை திட்டிய திமுக எம்எல்ஏ!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

நீதிபதி எம்.சுந்தர், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு!

செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர்!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வரிச் சுமைக் குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா : சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.4ஆக பதிவு!

காசி விஸ்வநாதர் கோயிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு – கோயில் அர்ச்சகர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

வேலூர் : விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

சென்னை : எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் 2 வது நாளாக ஊழியர்கள் போராட்டம்!

உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்றார்!

சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு – மாணவர் நலச் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் 2026 மார்ச் 5இல் நாடாளுமன்ற தேர்தல்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

நேபாளம் : போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த சுசீலா கார்கி!

கன்னியாகுமரி : ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies