ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !
Sep 9, 2025, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !

Web Desk by Web Desk
Sep 11, 2023, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 3-வது முறை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய ஆதித்யா-எல் 1 எனும் விண்கலம், சூரியனையை ஆராய்வதற்காக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி57 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆதித்யா-எல் 1 குறைந்தபட்சம் 235 கி.மீ. அதிகபட்சம் 19,500 கி.மீ. தூரம் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதை தூரத்தை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Aditya-L1 Mission:
The third Earth-bound maneuvre (EBN#3) is performed successfully from ISTRAC, Bengaluru.

ISRO's ground stations at Mauritius, Bengaluru, SDSC-SHAR and Port Blair tracked the satellite during this operation.

The new orbit attained is 296 km x 71767 km.… pic.twitter.com/r9a8xwQ4My

— ISRO (@isro) September 9, 2023

அந்த வகையில், ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் தற்போது 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  ஆதித்யா விண்கலம் பூமிக்கு அருகே வரும்போது, அதில் உள்ள இயந்திரங்கள் இயக்கப்பட்டு சுற்றுப் பாதை உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை ஏற்கெனவே 2 முறை மாற்றப்பட்டது. தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 9-ம் தேதி நள்ளிரவு விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது.

மொரீஷியஸ், பெங்களூரு, SDSC-SHAR மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையங்கள் இந்த நடவடிக்கையின் போது செயற்கைக்கோளைக் கண்காணித்தன.

இதன்மூலம், குறைந்தபட்சம் 296 கி.மீ. அதிகபட்சம் 71,767 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. இதுபோல இன்னும் 2 முறை சுற்றுப் பாதை உயரம் அதிகரிக்கப்படும். பின்னர், ஆதித்யாவின் அடுத்த சூழ்ச்சி செப்டம்பர் 15-ம் தேதி மதியம் 02:00 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, புவிவட்டப் பாதையில் இருந்து விலகி, சூரியனை நோக்கி விண்கலம் பயணிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதித்யா விண்கலம், சுமார் 4 மாத பயணத்துக்கு பிறகு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள எல்-1 பகுதி அருகே நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags: ISROaadhithya-L1
ShareTweetSendShare
Previous Post

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம்: மலரஞ்சலி – மரியாதை செய்த அண்ணாமலை!

Next Post

பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies