இந்திய நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது!
Jan 14, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது!

முகமது பின் சல்மானிடம் பிரதமர் மோடி உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 11, 2023, 08:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கான நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது. இரு நாட்டு உறவு சர்வதேச வளர்ச்சிக்கு உதவும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சவூதி இளவரசன் முகமது பின் சல்மானிடம் கூறினார்.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சவூதி அரேபியா நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் இந்தியா வந்திருந்தார். மற்ற நாடுகளின் தலைவர்கள் மாநாடு முடிந்ததும் நேற்றே கிளம்பி விட்ட நிலையில், சவூதி இள்வரசர் சல்மான் மட்டும் டெல்லியில் தங்கி இருந்தார்.

இந்த சூழலில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டது. மேலும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் முகமது பின் சல்மானிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையையும் சல்மான் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் பேசுகையில், “ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தது பாராட்டத்தக்கது. மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இதை சவூதி அரேபியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடுகளும்தான் சொல்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்து நாடுகளுக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா – சவூதி அரேபியா ஆகிய 2 நாடுகளும் வளமான எதிர்காலத்தை பெறுவதற்கு ஒன்றிணைந்து வேலை செய்வோம்” என்றார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி கூறுகையில், “இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார வழித்தடத்தை துவங்க முடிவு செய்துள்ளோம். இந்த வழித்தடமானது இரு நாடுகளை இணைப்பது மட்டுமின்றி, ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் இணைப்பை வழங்கவும் உதவும்.

உங்கள் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வை 2030-ன் கீழ், சவூதி அரேபியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியாவுக்கான நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது. இரு நாட்டு உறவு சர்வதேச வளர்ச்சிக்கு உதவும். ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Tags: talksPM Modisaudi arabiacrowm princemohammed bin salmanbilateral
ShareTweetSendShare
Previous Post

கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமர் மோடி 17-ம் தேதி புதிய திட்டம்!

Next Post

சாலையில் அமர்ந்து அண்ணாமலை தர்ணா போராட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies