திருப்பத்தூரில் கோர விபத்து: 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் – நிவாரணம் அறிவிப்பு!
Oct 26, 2025, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 திருப்பத்தூரில் கோர விபத்து: 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் – நிவாரணம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 12, 2023, 10:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் பலியானார்கள். விபத்தில் பலியானவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணமும் அறிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ளது ஓணாங்குட்டை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 45 பேர், கடந்த 8-ம் தேதி 2 வேன்களில், கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவுக்குச் சுற்றுலா சென்றனர்.

2 நாள்கள் சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று இரவு ஊர் திரும்பியுள்ளனர்.  அதிகாலை, பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்துள்ள சண்டியூரில் வேனின் டயர் பஞ்சரானது. இதனால், சாலையில் ஒரு பக்கமாக வேனை நிறுத்தி, வேன் ஓட்டுநர் அதனைச் சரி செய்து கொண்டிருந்தார்.

வேனிலிருந்த பெண்கள் கீழே இறங்கிவந்து, சாலையில் உள்ள சென்டர் மீடியனில் அமர்ந்திருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று, வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், சென்டர் மீடியனில் அமர்ந்திருந்த 7 பேர் மீது லாரி ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் துடிதுடித்து பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ள பாரத பிரதமர் மோடி, திருப்பத்தூர் சாலை விபத்தால் வேதனையுற்றேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்றும்,

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50000 பிரதமரின் தேசிய பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக நிவாரணம் வழங்கியப் பாரத பிரதமர் மோடிக்கு, அப்பகுதி மக்கள் கருணை உள்ளம் கொண்டவர் மோடி என புகழாராம் சூட்டியுள்ளார்.

 

Tags: pm modi condolence
ShareTweetSendShare
Previous Post

ஜி20 மாநாட்டில் இசை மழை: சாதனை படைத்த தமிழக கலைஞர்கள்

Next Post

கோடிகளை வாங்குபவர்களிடம் போய் கேளுங்கள் – கொந்தளித்த நடிகர் செந்தில்!

Related News

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies