கோடிகளை வாங்குபவர்களிடம் போய் கேளுங்கள் – கொந்தளித்த நடிகர் செந்தில்!
Sep 13, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடிகளை வாங்குபவர்களிடம் போய் கேளுங்கள் – கொந்தளித்த நடிகர் செந்தில்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 10:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில், ரூ.40 கோடி கடன் வாங்கப்படும் என, நடிகர் விஷாலின் கருத்துக்கு, நடிகர் செந்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்களிடம் போய் கேளுங்கள் எனக் கொந்தளித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் நாசர் தலைமையிலும், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விஷால், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இதற்காக, ரூ.40 கோடி கடன் வாங்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த நேற்றைய நிகழ்ச்சியில், பிரபல நடிகர்களான கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும், நடிகைகளில் முன்னணி கதாநாயகியாக வரும் நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், நேற்று கூட்டத்திற்கு வந்த நடிகர்கள் சிலர் நடிகர் சங்கத்தின் மீதான அதிருப்பதியை வெளிப்படையாகவே தெரிவித்தனர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில், தனது கண்டனத்தை முதன் முதலில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் செந்தில், தமிழ் நடிகர்கள் பலர் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் போய் கேட்காமல், மிக குறைந்த அளவில் சொற்ப சம்பளம் வாங்குபவர்களிடம் பணம் கேட்கிறார்கள். இது என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, நடிகர் செந்திலின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags: senthil actor
Share
Tweet
SendShare
Previous Post

 திருப்பத்தூரில் கோர விபத்து: 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் – நிவாரணம் அறிவிப்பு!

Next Post

மணிப்பூரில் நிலநடுக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies