திருப்பத்தூரில் கோர விபத்து: 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் – நிவாரணம் அறிவிப்பு!
Jun 14, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 திருப்பத்தூரில் கோர விபத்து: 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் – நிவாரணம் அறிவிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 10:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் பலியானார்கள். விபத்தில் பலியானவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணமும் அறிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ளது ஓணாங்குட்டை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 45 பேர், கடந்த 8-ம் தேதி 2 வேன்களில், கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவுக்குச் சுற்றுலா சென்றனர்.

2 நாள்கள் சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று இரவு ஊர் திரும்பியுள்ளனர்.  அதிகாலை, பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்துள்ள சண்டியூரில் வேனின் டயர் பஞ்சரானது. இதனால், சாலையில் ஒரு பக்கமாக வேனை நிறுத்தி, வேன் ஓட்டுநர் அதனைச் சரி செய்து கொண்டிருந்தார்.

வேனிலிருந்த பெண்கள் கீழே இறங்கிவந்து, சாலையில் உள்ள சென்டர் மீடியனில் அமர்ந்திருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று, வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், சென்டர் மீடியனில் அமர்ந்திருந்த 7 பேர் மீது லாரி ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் துடிதுடித்து பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ள பாரத பிரதமர் மோடி, திருப்பத்தூர் சாலை விபத்தால் வேதனையுற்றேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்றும்,

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50000 பிரதமரின் தேசிய பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக நிவாரணம் வழங்கியப் பாரத பிரதமர் மோடிக்கு, அப்பகுதி மக்கள் கருணை உள்ளம் கொண்டவர் மோடி என புகழாராம் சூட்டியுள்ளார்.

 

Tags: pm modi condolence
ShareTweetSendShare
Previous Post

ஜி20 மாநாட்டில் இசை மழை: சாதனை படைத்த தமிழக கலைஞர்கள்

Next Post

கோடிகளை வாங்குபவர்களிடம் போய் கேளுங்கள் – கொந்தளித்த நடிகர் செந்தில்!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies