திருப்பத்தூரில் கோர விபத்து: 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் – நிவாரணம் அறிவிப்பு!
Jul 29, 2026, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 திருப்பத்தூரில் கோர விபத்து: 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் – நிவாரணம் அறிவிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 10:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் பலியானார்கள். விபத்தில் பலியானவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணமும் அறிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ளது ஓணாங்குட்டை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 45 பேர், கடந்த 8-ம் தேதி 2 வேன்களில், கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவுக்குச் சுற்றுலா சென்றனர்.

2 நாள்கள் சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று இரவு ஊர் திரும்பியுள்ளனர்.  அதிகாலை, பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்துள்ள சண்டியூரில் வேனின் டயர் பஞ்சரானது. இதனால், சாலையில் ஒரு பக்கமாக வேனை நிறுத்தி, வேன் ஓட்டுநர் அதனைச் சரி செய்து கொண்டிருந்தார்.

வேனிலிருந்த பெண்கள் கீழே இறங்கிவந்து, சாலையில் உள்ள சென்டர் மீடியனில் அமர்ந்திருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று, வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், சென்டர் மீடியனில் அமர்ந்திருந்த 7 பேர் மீது லாரி ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் துடிதுடித்து பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ள பாரத பிரதமர் மோடி, திருப்பத்தூர் சாலை விபத்தால் வேதனையுற்றேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்றும்,

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50000 பிரதமரின் தேசிய பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக நிவாரணம் வழங்கியப் பாரத பிரதமர் மோடிக்கு, அப்பகுதி மக்கள் கருணை உள்ளம் கொண்டவர் மோடி என புகழாராம் சூட்டியுள்ளார்.

 

Tags: pm modi condolence
ShareTweetSendShare
Previous Post

ஜி20 மாநாட்டில் இசை மழை: சாதனை படைத்த தமிழக கலைஞர்கள்

Next Post

கோடிகளை வாங்குபவர்களிடம் போய் கேளுங்கள் – கொந்தளித்த நடிகர் செந்தில்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies