வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் என, சனாதன தர்மம் குறித்து மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் சனாதனம் குறித்து, தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தவறாக பிரச்சாரம் செய்து வருவதாக ஆன்மீக அன்புர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், சனாதன தர்மம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பது குறித்து மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், சனாதன தர்மம் என்பது ஆன்மிகம், வாழ்க்கை மற்றும் படைப்பு என அனைத்தையும் உள்ளடக்கியது.
இதில், படைப்பின் ஒவ்வொரு கூறுகளுமே, ஆன்மிகத்தின் பல்வேறு வெளிப்பாடுகளான். இவை ஒன்றோடொன்று தொடர்புடையது, இணைக்கப்பட்டதாகும்.
இது, ஒவ்வொரு தனிமனிதன், குடும்பம், சமூகம் என தங்களுக்குள்ளும், சுற்றுச்சூழலுக்கும் இடையே பரஸ்பர உறவைப் பிரதிபலிக்கிறது. இது தனிப்பட்ட மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
சனாதன தர்மத்தில் சாதி அல்லது சமூக பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. அத்தகைய பாகுபாடுகள் சமூகத் தீமைகள் மட்டுமின்றி, சனாதன தர்மத்துக்கும் எதிரானது.
சனாதன தர்மத்தின் முதல் ஆவணம் ரிக் வேதமே. அதில், பரமேஷ்வரர் அல்லது ஆதி பகவான் அல்லது சர்வ சக்தி உள்ள கடவுள்தான் படைப்புகளை உருவாக்கினார்.
ஒவ்வொரு படைப்புகளிலும் அங்கமாகக் கடவுள் இருக்கிறார். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றிலும் அவர் இருக்கிறார். இதனால், படைப்பு முழுவதும் ஒரு குடும்பமே.
இது உலகளாவிய ஒருமைப்பாடு, ஆன்மிக முயற்சி, மக்களின் அனுபவங்கள், அவை சூழலுக்கு ஏற்ப அனுபவிக்கப்படுகிறது.
எனவே, ஒவ்வொருவரும் அதை தங்கள் வழிகளில் வெளிப்படுத்தியும், சம்பிரதாயங்களையும், பாதைகளையும் உருவாக்குகிறார்கள். ஆனால், அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.
சமய நம்பிக்கையற்ற என்ற கருத்து சனாதன தர்மத்துக்கு அன்னியமானது. அதற்கு ஒருபோதும் சனாதன தர்மத்தில் இடம் இல்லை.
உலகம் ஒரு குடும்பம் அல்லது யாதும் ஊரே, யாவரும் கேளிர் ஆகியவை சனாதனத்தின் முக்கியமானவைகள் ஆகும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் எனத் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் கருத்துக்கு, ஆன்மிக அன்பர்களும், மடாதிபதிகளும், சமயத் தலைவர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.