ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !
Jul 29, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஈ.சி.ஆரில் பனையூர் அருகே ஆதித்யராம் மைதானத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி 10 -ம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, ஒரு தனியார் அமைப்பிடம் உரிமை வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம், வழக்கமான கட்டணத்தைவிட, 4 மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்துள்ளது. அதாவது, இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை பலரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.

இப்படிப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும், இசை நிகழ்ச்சியைப் பார்க்காமல் வீடு திரும்பியுள்ளனர்.

திரும்பிய திசை எல்லாம் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பலர் அங்கேயே வாந்தி எடுத்து, மயக்கமடைந்துள்ளனர். மேலும், சிலர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர். ஆக மொத்தம், பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் வாகன நிறுத்துமிடத்தில் வசதியும் செய்யவில்லை. இதனால், ஈ.சி.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நிலவியது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல மணி நேரம் ஊர்ந்து சென்றது.

இதனால், பாதிக்கப்பட்ட ரசிகர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த துயரம் , அவமானம், சிரமம் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் கொதித்தனர்.

இதனால், விரிவான விசாரணைக்கு, தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதில், பயந்து போன ஏர்.ஆர்.ரகுமான், இந்த பிரச்சனைகளுக்குத் தான் பொறுப்பேற்பதாகத் தெரித்துள்ளார்.

இதனிடையே, ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். அதாவது, திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி இரசிகர்களை மறக்கவிடாமல் செய்துவிட்டதுதான் பெரும் சோகம்.

Tags: ar rehmanar rehman concert
ShareTweetSendShare
Previous Post

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies