ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 01:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ஈ.சி.ஆரில் பனையூர் அருகே ஆதித்யராம் மைதானத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி 10 -ம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, ஒரு தனியார் அமைப்பிடம் உரிமை வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம், வழக்கமான கட்டணத்தைவிட, 4 மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்துள்ளது. அதாவது, இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை பலரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.

இப்படிப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும், இசை நிகழ்ச்சியைப் பார்க்காமல் வீடு திரும்பியுள்ளனர்.

திரும்பிய திசை எல்லாம் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பலர் அங்கேயே வாந்தி எடுத்து, மயக்கமடைந்துள்ளனர். மேலும், சிலர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர். ஆக மொத்தம், பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் வாகன நிறுத்துமிடத்தில் வசதியும் செய்யவில்லை. இதனால், ஈ.சி.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நிலவியது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல மணி நேரம் ஊர்ந்து சென்றது.

இதனால், பாதிக்கப்பட்ட ரசிகர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த துயரம் , அவமானம், சிரமம் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் கொதித்தனர்.

இதனால், விரிவான விசாரணைக்கு, தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதில், பயந்து போன ஏர்.ஆர்.ரகுமான், இந்த பிரச்சனைகளுக்குத் தான் பொறுப்பேற்பதாகத் தெரித்துள்ளார்.

இதனிடையே, ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். அதாவது, திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி இரசிகர்களை மறக்கவிடாமல் செய்துவிட்டதுதான் பெரும் சோகம்.

Tags: ar rehmanar rehman concert
Share
Tweet
SendShare
Previous Post

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies