சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?
Jan 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்து மதம் பற்றி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக, நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் விமல் என்பவர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் பாளையங்கோட்டை மறை மாவட்ட பொன்விழா ஆண்டு நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு என்பவர் 96 சதவீத இந்துக்களுக்குக் கல்வியை மறுத்தது தான் சனாதனம் என்றும், சனாதனம் என்றால் 4 சதவீத மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும் என்றும், 4 சதவீதத்தைத் தவிர்த்துப் பார்த்தால் 94 சதவீத இந்துக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துவ மக்கள் கூடியிருந்த சபையில் இந்து மதத்தை இழிவாகப் பேசி மத விழிப்புணர்வைத் தூண்டும் வகையிலும், பிற மதத்தினுடைய இந்து மதத்தை இழிவாகப் பேசியும், இரு தரப்பினுடைய கலவரம் உண்டு பண்ணும் வகையிலும், நாட்டில் சட்டம், ஒழுங்கு அமைதியைச் சீர் குலைக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

மேற்படி, அப்பாவு என்பவரின் இந்த பேச்சை முன்னிலைப்படுத்தி, இஸ்லாமியர்கள் சமூக வலைதளங்கில், இந்து மதம் குறித்து இழிவாகப் பேசி வருகின்றனர்.

மேலும், இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் அப்பாவு பேசியது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

அப்பாவு, இந்து மதத்தைக் குறித்து கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசியது குறித்து இந்துக்கள் பலர் என்னிடம் வேதனை தெரிவித்தனர்.

மதவெறுப்புணர்வை தூண்டும் வகையில், பேசிய சபாநாயகர் அப்பாவு மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, அமைதியையும், நீதியையும் நிலைநாட்டுமாறு வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, விமலுடன், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.

அப்போது, காவல் ஆய்வாளர் பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளதால், புகார் மனு மீது, உடனே ரசீது கொடுக்க முடியாது, இன்று மாலை வந்து ஆய்வாளரிடம் பேசுங்க என காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: sanatan dharmaappavu dmk mla
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 3 பேர் சுட்டுக்கொலை!

Next Post

ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies