உதயநிதி மீது மும்பையில் வழக்கு!
Sep 9, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி மீது மும்பையில் வழக்கு!

சனாதனம் குறித்த சர்ச்சைப் பேச்சால் நடவடிக்கை!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 08:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மும்பையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் சமீபத்தில் இடதுசாரி அமைப்பு நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், தி.மு.க. அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,  சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இது நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இந்துக்கள் மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உதயநிதிக்கு கருத்துக்கு உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர், சனாதனத்தை இழிவாகப் பேசிய உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தார். மேலும், அம்மாநிலத்தின் ராம்பூர் காவல் நிலையத்தில் இந்து வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில், உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தவிர, உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, முக்கியப் பிரமுகர்கள் பலரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.

இந்த நிலையில், சனாதன சர்ச்சை விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்திலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையிலுள்ள மிரா சாலை காவல் நிலையத்தில், இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்குவது,  மத நம்பிக்கையினை புண்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Tags: policesanatan dharmaUdayanithiMaharastra stateFIR
ShareTweetSendShare
Previous Post

விஷவாயு தாக்கி பலி: முதலிடத்தில் தமிழகம்!

Next Post

உலக ஹிந்தி தினம் : செப்டம்பர் 14!

Related News

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies