விஷவாயு தாக்கி பலி: முதலிடத்தில் தமிழகம்!
Jul 29, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஷவாயு தாக்கி பலி: முதலிடத்தில் தமிழகம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 08:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கழிவுநீர் அடைப்பைத் தூய்மைப்படுத்தும் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் தான், முதலிடத்தில் உள்ளது எனத் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், மதுரை தெப்பக்குளம் அருகில் பாதாளச் சாக்கடையில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணம் இன்றி வேலை செய்வதாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், அங்கு ஆய்வு செய்தார். பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், இந்தியாவில் 11 மாநிலங்களில் தான் தூய்மை பணியாளர் ஆணையம் உள்ளது. அடுத்து, புதுச்சேரியில் தூய்மை பணியாளர் ஆணையம் தொடங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

தூய்மை பணியில் ஒப்பந்த முறைகளை ஒழிக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக பணம் வழங்க வேண்டும். ஒரு சில மாநிலங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வது மிகவும் ஆபத்தான பணி. இதனை யாரும் செய்யக் கூடாது. தூய்மைப் பணியின்போது கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து இதுவரை தமிழகத்தில் கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 400 பேர் இறந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர் என்றவர், துப்புரவு பணியாளர்கள், பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் சாலையோரம் படுத்துத் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு!

Next Post

உதயநிதி மீது மும்பையில் வழக்கு!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies