இந்திய மாணவி கார் ஏற்றிக் கொலை: அலட்சிய காவல்துறை மீது அதிரடி நடவடிக்கை!
Aug 25, 2025, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மாணவி கார் ஏற்றிக் கொலை: அலட்சிய காவல்துறை மீது அதிரடி நடவடிக்கை!

காவல்துறையினர் கேலி பேசிய வீடியோ வெளியானதால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Sep 14, 2023, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த நிலையில், அச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கேலி செய்து அலட்சியமாக சிரித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்வி கண்டூலா. 23 வயதாகும் இவர், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டல் நகரில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர், கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி சியாட்டலில் சாலையைக் கடந்தபோது, அதிவேகமாக வந்த காவல்துறை ரோந்து வாகனம் மோதியது. இதில், 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது, அந்தக் காரை ஓட்டி வந்த காவல்துறை அதிகாரி கெவின் டேவ், மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வந்ததாக, உடன் வந்த காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தக் கார் மணிக்கு 120 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதிகாரி டேனியல் ஆடரர், சியாட்டல் நகர காவல் அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்த சூழலில், விபத்து நடந்தவுடன் சங்கத்தின் தலைவரும், மூத்த காவல்துறை அதிகாரியுமான மைக் சோலன் என்பவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய டேனியல் ஆடரர், “வழக்கமான பெண் தான். 11,000 டாலருக்கு காசோலை தயார் செய்து வையுங்கள். அவளுக்கு 26 வயதுதான் இருக்கும். எனவே, பெரிய மதிப்பு இல்லை” என்று கூறிவிட்டு சத்தமாக சிரிக்கிறார். டேனியல் ஆடரர் பேசிய பேச்சு முழுவதும், அவரது உடம்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

இதை சீயாட்டல் காவல்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, தொலைபேசியில் உரையாடிய 2 காவல்துறை அதிகாரிகள் மீதும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Tags: DeadviralamericaaccidentVIDEOIndian studentpolice car
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து: பள்ளிக் குழந்தைகளின் கதி?

Next Post

பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த திடீர் முடிவு – என்ன காரணம்?

Related News

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

வடமேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நோயாளி இல்லாமல் இபிஎஸ் கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ் – சரமாரி கேள்வி கேட்ட அதிமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

குறைந்த விலைக்கு கிடைக்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வோம் – இந்தியா திட்டவட்டம்!

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தம் – மத்திய அரசு அறிவிப்பு!

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies