சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!

ரூ.6,350 கோடி மதிப்பிலான இரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்து உரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 15, 2023, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். பின்னர், ராய்கரில் நடந்த நிகழ்ச்சியில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 9 மாவட்டங்களில் தலா 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 9 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பரிமாண வளர்ச்சிக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

நமது நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், பிராந்தியமும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் முன்னுரிமை பெறுகின்றன. நாட்டின் அதிகார மையங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. மேலும், நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது, சத்தீஸ்கர் மத்திய அரசிடம் இருந்து மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களைப் பெறுகிறது. சுமார் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே துறை திட்டங்களை மாநிலத்திற்கு அர்ப்பணித்திருக்கிறோம். இதன் மூலம், சத்தீஸ்கரின் ரயில்வே மேம்பாட்டில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.

இது சத்தீஸ்கரின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். சத்தீஸ்கரின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பல பரிமாண மேம்பாட்டிற்காக மத்திய அரசு உழைத்திருக்கிறது. ஜி20 மாநாட்டுக்கு வருகை தந்திருந்த உலகத் தலைவர்கள், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சமூகநல மாதிரியால்  மிகவும் ஈர்க்கப்பட்டனர். இந்தியாவின் வெற்றிகளிலிருந்து கற்றுக்கொள்வது குறித்து உலகளாவிய அமைப்புகள் பேசுகின்றன” என்று கூறினார்.

சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம் -1, சம்பா முதல் ஜம்கா வரை 3-வது ரயில் பாதை, பெந்த்ரா சாலை முதல் அனுப்பூர் வரை 3-வது ரயில் பாதை மற்றும் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை என்.டி.பி.சி. லாரா சூப்பர் அனல் மின் நிலையத்துடன் (எஸ்.டி.பி.எஸ்) இணைக்கும் எம்.ஜி.ஆர் (மெர்ரி-கோ-ரவுண்ட்) அமைப்பு ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.

Tags: PM ModiChhattisgarhRailway ProjectLay Foundation
ShareTweetSendShare
Previous Post

சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் புகழாரம்!

Next Post

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies