சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Jul 29, 2026, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!

ரூ.6,350 கோடி மதிப்பிலான இரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்து உரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 15, 2023, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். பின்னர், ராய்கரில் நடந்த நிகழ்ச்சியில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 9 மாவட்டங்களில் தலா 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 9 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பரிமாண வளர்ச்சிக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

நமது நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், பிராந்தியமும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் முன்னுரிமை பெறுகின்றன. நாட்டின் அதிகார மையங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. மேலும், நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது, சத்தீஸ்கர் மத்திய அரசிடம் இருந்து மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களைப் பெறுகிறது. சுமார் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே துறை திட்டங்களை மாநிலத்திற்கு அர்ப்பணித்திருக்கிறோம். இதன் மூலம், சத்தீஸ்கரின் ரயில்வே மேம்பாட்டில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.

இது சத்தீஸ்கரின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். சத்தீஸ்கரின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பல பரிமாண மேம்பாட்டிற்காக மத்திய அரசு உழைத்திருக்கிறது. ஜி20 மாநாட்டுக்கு வருகை தந்திருந்த உலகத் தலைவர்கள், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சமூகநல மாதிரியால்  மிகவும் ஈர்க்கப்பட்டனர். இந்தியாவின் வெற்றிகளிலிருந்து கற்றுக்கொள்வது குறித்து உலகளாவிய அமைப்புகள் பேசுகின்றன” என்று கூறினார்.

சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம் -1, சம்பா முதல் ஜம்கா வரை 3-வது ரயில் பாதை, பெந்த்ரா சாலை முதல் அனுப்பூர் வரை 3-வது ரயில் பாதை மற்றும் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை என்.டி.பி.சி. லாரா சூப்பர் அனல் மின் நிலையத்துடன் (எஸ்.டி.பி.எஸ்) இணைக்கும் எம்.ஜி.ஆர் (மெர்ரி-கோ-ரவுண்ட்) அமைப்பு ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.

Tags: PM ModiChhattisgarhRailway ProjectLay Foundation
ShareTweetSendShare
Previous Post

சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் புகழாரம்!

Next Post

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies