சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!

ரூ.6,350 கோடி மதிப்பிலான இரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்து உரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 15, 2023, 01:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். பின்னர், ராய்கரில் நடந்த நிகழ்ச்சியில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 9 மாவட்டங்களில் தலா 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 9 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பரிமாண வளர்ச்சிக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

நமது நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், பிராந்தியமும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் முன்னுரிமை பெறுகின்றன. நாட்டின் அதிகார மையங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. மேலும், நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது, சத்தீஸ்கர் மத்திய அரசிடம் இருந்து மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களைப் பெறுகிறது. சுமார் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே துறை திட்டங்களை மாநிலத்திற்கு அர்ப்பணித்திருக்கிறோம். இதன் மூலம், சத்தீஸ்கரின் ரயில்வே மேம்பாட்டில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.

இது சத்தீஸ்கரின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். சத்தீஸ்கரின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பல பரிமாண மேம்பாட்டிற்காக மத்திய அரசு உழைத்திருக்கிறது. ஜி20 மாநாட்டுக்கு வருகை தந்திருந்த உலகத் தலைவர்கள், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சமூகநல மாதிரியால்  மிகவும் ஈர்க்கப்பட்டனர். இந்தியாவின் வெற்றிகளிலிருந்து கற்றுக்கொள்வது குறித்து உலகளாவிய அமைப்புகள் பேசுகின்றன” என்று கூறினார்.

சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம் -1, சம்பா முதல் ஜம்கா வரை 3-வது ரயில் பாதை, பெந்த்ரா சாலை முதல் அனுப்பூர் வரை 3-வது ரயில் பாதை மற்றும் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை என்.டி.பி.சி. லாரா சூப்பர் அனல் மின் நிலையத்துடன் (எஸ்.டி.பி.எஸ்) இணைக்கும் எம்.ஜி.ஆர் (மெர்ரி-கோ-ரவுண்ட்) அமைப்பு ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.

Tags: PM ModiChhattisgarhRailway ProjectLay Foundation
Share
Tweet
SendShare
Previous Post

சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் புகழாரம்!

Next Post

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies