சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!
Jan 14, 2026, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

லண்டன் பிரபல பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் புகழாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 15, 2023, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன அதிபர் ஜி ஜின் பிங்கைவிட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்று லண்டன் நகரைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் புகழாரம் சூட்டி இருக்கிறார். மேலும், ஜி20 உச்சி மாநாட்டின் டெல்லி கூட்டுப் பிரகடனம் மூலம், உலகளாவிய பிரச்சனைகளுக்கு உண்மையான, உலகளாவிய தீர்வுகளை வழங்குவதற்கான நோக்கம் மற்றும் சட்டபூர்வமான ஒரே அமைப்பு ஜி20 மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சமீபத்தில் “பிரிக்ஸ்” உச்சி மாநாடு நடந்தது. தொடர்ந்து, டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. இந்த இரு மாநாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தியது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான். இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாடு மற்றும் ஜி20 உச்சி மாநாடு குறித்த தனது நிலைப்பாட்டை லண்டனைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து ஜிம் ஓ நீல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியா, சீனா ஒற்றுமை இல்லாதது, புதிய “பிரிக்ஸ்” அமைப்பிற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். தற்போது, ​​ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின் பிங் கலந்துகொள்ளாதது இரு நாடுகளுக்கு இடையேயான பிளவை ஆழப்படுத்தி இருக்கிறது. மேலும், ஜி ஜின் பிங் எங்களை வேறுவிதமாக சமாதானப்படுத்த விரும்பினால், அதற்காக அவர் மோடியை அணுக வேண்டிய அவசியம் ஏற்படும்.

ஜி20 மாநாட்டின் வெற்றி, மோடியை உலக அளவில் தெளிவான வெற்றியாளராக மாற்றி இருக்கிறது. ஜி20 உச்சி மாநாட்டின் டெல்லி கூட்டுப் பிரகடனம் மூலம், உலகளாவிய பிரச்சனைகளுக்கு உண்மையான, உலகளாவிய தீர்வுகளை வழங்குவதற்கான நோக்கம் மற்றும் சட்டபூர்வமான ஒரே அமைப்பு ஜி20 மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. உணர்வுகள் மிகவும் முக்கியம். தற்போது மோடி, ஜி ஜின் பிங்கைவிட ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதி போல் இருக்கிறார்.

அதேபோல, ஜி20 மற்றொரு நுட்பமான, முக்கியமான நிலையை அடைந்திருக்கிறது. அதுதான் ஆப்பிரிக்க யூனியனைச் சேர்க்க ஒப்புக்கொண்டது. இந்த சாதனையின் மூலம் ஜி20 அமைப்பை ஜி21 அமைப்பாக மாற்றியதை நாம் மறந்துவிட கூடாது. இந்த முன்னேற்றம் மோடிக்கு தெளிவான இராஜதந்திர வெற்றியை அளிக்கிறது. இது உலகளாவிய தெற்கின் சாம்பியனாக மோடியின் செல்வாக்கை உயர்த்த அனுமதிக்கிறது. எகிப்து மற்றும் எத்தியோப்பியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பு விரிவாக்கத்தின் சீரற்ற தன்மையை இது மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.

Tags: PM ModiLondonPraisedEconamistJim O Neill
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

இந்து அமைப்பினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies