சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!
Jul 4, 2025, 06:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

லண்டன் பிரபல பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் புகழாரம்!

Web Desk by Web Desk
Sep 15, 2023, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன அதிபர் ஜி ஜின் பிங்கைவிட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்று லண்டன் நகரைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் புகழாரம் சூட்டி இருக்கிறார். மேலும், ஜி20 உச்சி மாநாட்டின் டெல்லி கூட்டுப் பிரகடனம் மூலம், உலகளாவிய பிரச்சனைகளுக்கு உண்மையான, உலகளாவிய தீர்வுகளை வழங்குவதற்கான நோக்கம் மற்றும் சட்டபூர்வமான ஒரே அமைப்பு ஜி20 மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சமீபத்தில் “பிரிக்ஸ்” உச்சி மாநாடு நடந்தது. தொடர்ந்து, டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. இந்த இரு மாநாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தியது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான். இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாடு மற்றும் ஜி20 உச்சி மாநாடு குறித்த தனது நிலைப்பாட்டை லண்டனைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து ஜிம் ஓ நீல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியா, சீனா ஒற்றுமை இல்லாதது, புதிய “பிரிக்ஸ்” அமைப்பிற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். தற்போது, ​​ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின் பிங் கலந்துகொள்ளாதது இரு நாடுகளுக்கு இடையேயான பிளவை ஆழப்படுத்தி இருக்கிறது. மேலும், ஜி ஜின் பிங் எங்களை வேறுவிதமாக சமாதானப்படுத்த விரும்பினால், அதற்காக அவர் மோடியை அணுக வேண்டிய அவசியம் ஏற்படும்.

ஜி20 மாநாட்டின் வெற்றி, மோடியை உலக அளவில் தெளிவான வெற்றியாளராக மாற்றி இருக்கிறது. ஜி20 உச்சி மாநாட்டின் டெல்லி கூட்டுப் பிரகடனம் மூலம், உலகளாவிய பிரச்சனைகளுக்கு உண்மையான, உலகளாவிய தீர்வுகளை வழங்குவதற்கான நோக்கம் மற்றும் சட்டபூர்வமான ஒரே அமைப்பு ஜி20 மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. உணர்வுகள் மிகவும் முக்கியம். தற்போது மோடி, ஜி ஜின் பிங்கைவிட ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதி போல் இருக்கிறார்.

அதேபோல, ஜி20 மற்றொரு நுட்பமான, முக்கியமான நிலையை அடைந்திருக்கிறது. அதுதான் ஆப்பிரிக்க யூனியனைச் சேர்க்க ஒப்புக்கொண்டது. இந்த சாதனையின் மூலம் ஜி20 அமைப்பை ஜி21 அமைப்பாக மாற்றியதை நாம் மறந்துவிட கூடாது. இந்த முன்னேற்றம் மோடிக்கு தெளிவான இராஜதந்திர வெற்றியை அளிக்கிறது. இது உலகளாவிய தெற்கின் சாம்பியனாக மோடியின் செல்வாக்கை உயர்த்த அனுமதிக்கிறது. எகிப்து மற்றும் எத்தியோப்பியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பு விரிவாக்கத்தின் சீரற்ற தன்மையை இது மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.

Tags: PM ModiLondonPraisedEconamistJim O Neill
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

இந்து அமைப்பினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

Related News

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies