காங்கிரஸ் ஊழலை அம்பலப்படுத்திய "ஜவான்": பா.ஜ.க. பாராட்டு!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் ஊழலை அம்பலப்படுத்திய “ஜவான்”: பா.ஜ.க. பாராட்டு!

ஆயுதக் கொள்முதல் முதல் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஊழல் வரை அம்பலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஆயுதக் கொள்முதல் ஊழல் முதல், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி குழந்தைகள் உயிரிழந்தது வரையிலான அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகளை “ஜவான்” திரைப்படம் அம்பலப்படுத்தி இருப்பதாக, பா.ஜ.க. பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

தமிழ்த் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‛ஜவான்’. தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் ஷாருக்கான் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தல், அரசு மருத்துவனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது, ஆயுதக் கொள்முதல் ஊழல், மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்குடன் அரசியல் தலைவர்கள் ஒப்பந்தம் செய்தல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான், பா.ஜ.க. சார்பில் ‛ஜவான்’ திரைப்படத்துக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜவான் திரைப்படத்தின் மூலம் 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. அதேசமயம், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஊழலற்ற அரசாக, தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை வழங்கும் அரசாக 9 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மை, நேர்மையான ஆட்சியை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டிருக்கிறது.

காங்கிரஸ் காலத்தில் 1.6 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு, பிரதமர் கிசான் சம்மன் நிதித் திட்டத்தின் மூலம் 11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 2.55 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் கடனை திருப்பிச் செலுத்தாத நண்பர்களுக்கு மீண்டும் கடன் வழங்கப்பட்டது. தப்பியோடிய விஜய் மல்லையா, முந்தையக் கடனைக் கூட திருப்பி செலுத்தாமல், மேலும் கடனை நீட்டித்ததற்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், ராணுவத்தின் நலனில் மோடி அரசு மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு 2.3 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை மோடி அரசு வழங்கி இருக்கிறது. மேலும், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்காக 1.2 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு வழங்கி இருக்கிறது. அதேபோல, ராணுவத்தை வலுப்படுத்துவதற்காக ரஃபேல், அபாச்சி, ச்சினூக் ஆகியவை வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த கால ஆட்சியில் குண்டு துளைக்காத ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக வி.வி.ஐ.பி.க்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்குவதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு மோடி அரசு உடனுக்குடன் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பால்கோட் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேசமயம், காங்கிரஸ் ஆட்சியில் மும்பைத் தாக்குதல் நடந்தபோது, அதற்கு பதிலடி கொடுக்க துல்லியத் தாக்குதல் நடத்த ராணுவம் அனுமதி கோரியபோது, அப்போதைய அரசு அனுமதி மறுத்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.

Tags: bjpCongressPraisedJawanfilmscamExposed
ShareTweetSendShare
Previous Post

சச்சின் சவுத்ரி தாக்கல் செய்த மனு- உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Next Post

மணல் குவாரி அதிபர்கள் 3 பேர் தலைமறைவு – அதிர்ச்சி பின்னணி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies