ஆ.ராசா ஆபத்தானவர் –அர்ஜூன் சம்பத் !
Mar 15, 2026, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆ.ராசா ஆபத்தானவர் –அர்ஜூன் சம்பத் !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 16, 2023, 08:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவினர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பிரிவினைவாதம் பேசி வருகின்றனர். இதில், உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் ஆ.ராசாதான் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில், சனாதனம் குறித்த அவதூறு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. சனாதனம் என்பது தொன்மையான தர்மம். தமிழக அரசின் பாடப்புத்தகத்திலும் கூட, அது குறித்து மிகத் தெளிவாக உள்ளது. ஆனால், மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம் என்றெல்லாம் கூறியவர்கள், அதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் பின்வாங்குகிறார்கள்.

திருவாரூரில் உள்ள திருவிக கல்லூரியில் சனாதனத்தை எதிர்த்துப் பேசுவதற்கான சுற்றறிக்கையே அனுப்பி உள்ளனர். இது தவறான முன்னுதாரணம். திலகர் காலத்தில் ஹிந்து சமய ஒற்றுமை விழாவாக நடந்த விநாயகர் ஊர்வலம், தற்போது வரை பன்னெடும் காலமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில், லஞ்சம் ஊழல், சட்டம் ஒழுங்கு, போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. அந்த தோல்வியைத் திசை திருப்பவே, ஹிந்து கலாச்சாரத்துக்குத் தடை விதிக்கின்றனர்.

திருவள்ளுவரைக் கிறிஸ்தவர் என்றும், திருக்குறள் தங்கத் தட்டில் வைக்கப்பட்ட மலம் என்றும் பேசிய ஈ.வெ.ரா., போன்றவர்களைக் கைது செய்யவில்லை. ஆனால், ஆன்மீக பேச்சாளர் மணியன், திருவள்ளுவரின் உண்மை விசயங்களை எடுத்துப் பேசியதற்காக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதிலிருந்தே, திமுகவினர் ஹிந்து தர்மத்தின் மீதும், பிராமணர்கள் மீதும் எந்த அளவு வெறுப்புணர்வோடு செயல்படுகின்றனர் எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஆ.ராசா, உதயநிதி போன்றவர்கள் வேண்டுமென்றே உள் நோக்கத்தோடு பிரிவினை பேசி வருகின்றனர். இதில், உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் ஆ.ராசாதான். திராவிட மாடல் ஆட்சியாளர்கள் வெறுப்பு பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளனர். இதை நான் சொல்லவில்லை. உலகமே சொல்கிறது.

ஜனநாயகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை. ஆட்சிப் பொறுப்பிலும், அதிகாரத்திலும் இருப்பதால், திமுகவினர் அடக்குமுறை நடவடிக்கைகளை கையாளுகின்றனர். அவர்களுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

Tags: tamilnaduajun sambath
ShareTweetSendShare
Previous Post

நாடகத்தை நிறுத்துங்கப்பா! – திமுகவுக்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை!

Next Post

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: திமுக எம்பிக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம் – முழு விவரம்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies