ஆ.ராசா ஆபத்தானவர் –அர்ஜூன் சம்பத் !
Jun 9, 2025, 08:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆ.ராசா ஆபத்தானவர் –அர்ஜூன் சம்பத் !

Web Desk by Web Desk
Sep 16, 2023, 08:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவினர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பிரிவினைவாதம் பேசி வருகின்றனர். இதில், உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் ஆ.ராசாதான் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில், சனாதனம் குறித்த அவதூறு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. சனாதனம் என்பது தொன்மையான தர்மம். தமிழக அரசின் பாடப்புத்தகத்திலும் கூட, அது குறித்து மிகத் தெளிவாக உள்ளது. ஆனால், மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம் என்றெல்லாம் கூறியவர்கள், அதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் பின்வாங்குகிறார்கள்.

திருவாரூரில் உள்ள திருவிக கல்லூரியில் சனாதனத்தை எதிர்த்துப் பேசுவதற்கான சுற்றறிக்கையே அனுப்பி உள்ளனர். இது தவறான முன்னுதாரணம். திலகர் காலத்தில் ஹிந்து சமய ஒற்றுமை விழாவாக நடந்த விநாயகர் ஊர்வலம், தற்போது வரை பன்னெடும் காலமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில், லஞ்சம் ஊழல், சட்டம் ஒழுங்கு, போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. அந்த தோல்வியைத் திசை திருப்பவே, ஹிந்து கலாச்சாரத்துக்குத் தடை விதிக்கின்றனர்.

திருவள்ளுவரைக் கிறிஸ்தவர் என்றும், திருக்குறள் தங்கத் தட்டில் வைக்கப்பட்ட மலம் என்றும் பேசிய ஈ.வெ.ரா., போன்றவர்களைக் கைது செய்யவில்லை. ஆனால், ஆன்மீக பேச்சாளர் மணியன், திருவள்ளுவரின் உண்மை விசயங்களை எடுத்துப் பேசியதற்காக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதிலிருந்தே, திமுகவினர் ஹிந்து தர்மத்தின் மீதும், பிராமணர்கள் மீதும் எந்த அளவு வெறுப்புணர்வோடு செயல்படுகின்றனர் எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஆ.ராசா, உதயநிதி போன்றவர்கள் வேண்டுமென்றே உள் நோக்கத்தோடு பிரிவினை பேசி வருகின்றனர். இதில், உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் ஆ.ராசாதான். திராவிட மாடல் ஆட்சியாளர்கள் வெறுப்பு பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளனர். இதை நான் சொல்லவில்லை. உலகமே சொல்கிறது.

ஜனநாயகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை. ஆட்சிப் பொறுப்பிலும், அதிகாரத்திலும் இருப்பதால், திமுகவினர் அடக்குமுறை நடவடிக்கைகளை கையாளுகின்றனர். அவர்களுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

Tags: tamilnaduajun sambath
ShareTweetSendShare
Previous Post

நாடகத்தை நிறுத்துங்கப்பா! – திமுகவுக்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை!

Next Post

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: திமுக எம்பிக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம் – முழு விவரம்

Related News

வைகாசி வளர்பிறை பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் – மதுரை உயர்மட்ட குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

திண்டுக்கல் அருகே கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கடலூர் அருகே கொள்முதல் நிலையத்தில் மணிகள் முளைத்து வீணாகும் நெல் – அதிகாரிகள் அலட்சியமே காரணம் என விவசாயிகள் வேதனை!

பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை – போலீஸ் விசாரணை!

வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை – சரிந்து விழுந்த ராட்சத பேனர்!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாடுதுறை அருகே அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் – காப்பாற்றிய இளைஞர்!

கொடைக்கானல் குணா குகை அருகே ஆபத்தான முறையில் ரீல்ஸ் – இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

கோவையில் கள்ள நோட்டுகளை வைத்து மோசடி செய்தவர் கைது!

மதுரையில் தான் திமுகவுக்கு முடிவுரை – பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேச்சு!

பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி படுகொலை – அண்ணாமலை கண்டனம்

மக்களை ஏமாற்றும் திமுகவை வீட்டுக்கு அனுப்பவே அமித்ஷா மதுரை வந்துள்ளார் – அண்ணாமலை

தமிழகத்தில் SILENT OPERATION – நயினார் நாகேந்திரன் பேச்சு!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies