'ஒரே நாடு, ஒரே தேர்தல்': 23-ல் ஆய்வுக் குழு முதல் கூட்டம்!
Aug 18, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: 23-ல் ஆய்வுக் குழு முதல் கூட்டம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 17, 2023, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் என்று அக்குழுவின் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார்.

தற்போது, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பண விரையமும், கால விரையமும், மனித உடல் உழைப்பு விரையமும் ஏற்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றம் முதல் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வரை அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி வைத்த கோரிக்கையை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆதரித்தார். 2018-ம் ஆண்டு நாடாளுமன்த்தில் பேசிய ராம்நாத் கோவிந்த், “அடிக்கடி தேர்தல்கள் மனித வளத்தின் மீது பெரும் சுமையை சுமத்துவது மட்டுமல்லாமல், மாதிரி நடத்தை விதிகளை பிரகடனப்படுத்துவதால் வளர்ச்சி செயல்முறையையும் தடுக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, ஒரே நேரத்தில் அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், மேற்கண்ட கமிட்டிகள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதனால், ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. ஆகவே, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வராமலேயே இருந்தது.

இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். தவிர, சிறப்பு அழைப்பாளராக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் உறுப்பினர் பதவியை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில்தான், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று, அக்குழுவின் தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார். ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ராம்நாத் கோவிந்த், செய்தியாளர்களிடம் கூறுகையில் இத்தகவலை தெரிவித்தார். மேலும், இக்கூட்டத்தில், மக்களவை, மாநில சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Tags: one nation one electionseptember 23first meetingcommittee
ShareTweetSendShare
Previous Post

ஸ்லீப்பர் வசதியுடன் புதிய வந்தே பாரத் இரயில்கள்!

Next Post

சிறப்புக் கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சி கூட்டம்!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies