'ஒரே நாடு, ஒரே தேர்தல்': 23-ல் ஆய்வுக் குழு முதல் கூட்டம்!
Jan 14, 2026, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: 23-ல் ஆய்வுக் குழு முதல் கூட்டம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 17, 2023, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் என்று அக்குழுவின் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார்.

தற்போது, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பண விரையமும், கால விரையமும், மனித உடல் உழைப்பு விரையமும் ஏற்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றம் முதல் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வரை அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி வைத்த கோரிக்கையை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆதரித்தார். 2018-ம் ஆண்டு நாடாளுமன்த்தில் பேசிய ராம்நாத் கோவிந்த், “அடிக்கடி தேர்தல்கள் மனித வளத்தின் மீது பெரும் சுமையை சுமத்துவது மட்டுமல்லாமல், மாதிரி நடத்தை விதிகளை பிரகடனப்படுத்துவதால் வளர்ச்சி செயல்முறையையும் தடுக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, ஒரே நேரத்தில் அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், மேற்கண்ட கமிட்டிகள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதனால், ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. ஆகவே, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வராமலேயே இருந்தது.

இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். தவிர, சிறப்பு அழைப்பாளராக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் உறுப்பினர் பதவியை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில்தான், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று, அக்குழுவின் தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார். ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ராம்நாத் கோவிந்த், செய்தியாளர்களிடம் கூறுகையில் இத்தகவலை தெரிவித்தார். மேலும், இக்கூட்டத்தில், மக்களவை, மாநில சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Tags: one nation one electionseptember 23first meetingcommittee
ShareTweetSendShare
Previous Post

ஸ்லீப்பர் வசதியுடன் புதிய வந்தே பாரத் இரயில்கள்!

Next Post

சிறப்புக் கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சி கூட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies