சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ தகவல்!
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ தகவல்!

5-வது முறையாக சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 19, 2023, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5-வது முறையாக உயர்த்தப்பட்டு சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்த்தப்பட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு ஆராய்ச்சியை நடத்தி வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட், ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது.

இதன் பிறகு, ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம், 4 மாத பயணத்திற்குப் பிறகு, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி தனது இலக்கை அடையும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. மேலும், லாக்ராஞ்சன் எல் 1 என்கிற இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு, அங்கிருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த 15-ம் தேதி 4-வது முறையாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை செப்டம்பர் 19-ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று 5-வது முறையாக ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருக்கும் தகவலில், “இன்று அதிகாலை 2 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5-வது முறையாக அதிகரிக்கப்பட்டது. தற்போது, சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக நகர்ந்திருக்கிறது. சுற்று வட்டப்பாதை உயர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளது” என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Tags: aditya spacecraft5th time orbit changetravel sun
ShareTweetSendShare
Previous Post

நள்ளிரவில் காவல்துறை மனித உரிமை மீறல் – இந்து முன்னணி கண்டனம்!

Next Post

மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies