மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!
Aug 8, 2026, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப் பகுதியில் விடப்பட்டிருந்த அரிகொம்பன் யானை ஊத்து மற்றும் நான்குமுக்கு எஸ்டேட் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சேதப்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

சின்னக்கானல், சந்தன்பாறை, போடிமெட்டு ஆகிய மக்கள் வசிக்கும் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக 11 பேரை மிதித்துக் கொன்றது. மேலும், நியாயவிலைக்கடை கடைகளில் புகுந்து அரிசியை மட்டும் ருசி பார்த்தது. இதனால், இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என பெயர் வந்தது.

ஆனால், 2005 முதல் 2013 வரை இந்த பகுதிகளில் யானை தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 34 என்றும், இது அரிசிக் கொம்பனின் வேலை என்றும் பதைபதைக்கிறார்கள் கிராம மக்கள்.

அரிசிக்கொம்பனை கும்கி யானையாக மாற்ற வனத்துறை முடிவு செய்தனர். ஆனால், அரிசிக்கொம்பனை சிறைபிடிக்காமல், வனப்பகுதிக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், திட்டத்தை மாற்றிய வனத்துறையினர் 150 வனத்துறையினர், 5 மயக்க வியல் மருத்துவர்கள், 4 கும்கி யானைகள் என பெரும் குழுவினர் இணைந்து அரிசிக்கொம்பனை பெரும் போராட்டத்திற்குப் பின்னர் மடக்கிப் பிடித்தனர்.

அதன் கழுத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, லாரியில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர். இதனால், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப் பகுதியில் விடப்பட்டிருந்த அரிகொம்பன், யாரும் எதிர்பாராத வகையில் திரும்பி வந்துள்ளது.

குறிப்பாக, ஊத்து மற்றும் நான்குமுக்கு எஸ்டேட் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சேதப்படுத்தியுள்ளது.

இதனால், அரிகொம்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொது மக்கள் தங்கள் உயிருக்குப் பயந்து வீடுகளுக்குள் முடங்கி வருகின்றனர்.

Tags: elephant
Share
Tweet
SendShare
Previous Post

சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ தகவல்!

Next Post

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!

Related News

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies