இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!
Jun 15, 2026, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!

Murugesan M by Murugesan M
Sep 19, 2023, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு (ஸ்வவ்லாம்பன்-2023) அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்திய கடற்படையின் கடற்படை புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் (என்ஐஐஓ) கருத்தரங்கின் 2வது பதிப்பான ‘ஸ்வவ்லாம்பன் 2023-ஐ அக்டோபர் 04 மற்றும் 05 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 2022 இல் நடைபெற்ற கருத்தரங்கின் முதல் பதிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, ‘ஸ்பிரிண்ட்’ முன்முயற்சியின் ஒரு பகுதியாக புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான 75 போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

‘ஸ்பிரிண்ட் சவால் போட்டிகள்’, இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக குறைந்தது 75 தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்க கடற்படை உறுதிபூண்டுள்ளது.

ஸ்பிரிண்ட் என்பது பாதுகாப்பு கண்டுபிடிப்பு அமைப்புடன் (டிஐஓ) இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும். விரிவான ஆய்வுக்குப் பிறகு, டிஸ்க் 7 ஸ்பிரிண்ட் பிரிவில் (1.5 கோடி வரை மானியங்களுடன்) 113 வெற்றியாளர்களும், டிஸ்க் 7 ஸ்பிரிண்ட்-பிரைம் பிரிவில் (10 கோடி வரை மானியங்கள்) 5 வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். மேலும் அனைத்து வெற்றியாளர்களாலும் முன்மாதிரிகளின் மேம்பாட்டுப் பணிகள் முன்னேற்றமடைந்து வருகிறது.

நீருக்கடியில் பயன்படுத்தப்படும் நீல-பச்சை லேசர்கள் உட்பட முக்கிய தொழில்நுட்பங்கள் முன்னேற்றமடைந்து வருகின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கை நுண்ணறிவை (Al) அறிமுகப்படுத்துதல் மற்றும் கடல்சார் பணிகளுக்காக அதிநவீன செயல்பாட்டுத் தன்மை கொண்ட சிறிய ட்ரோன்களை உருவாக்குதல் போன்ற பணிகளும் நடைபெறுகின்றன.

புதுதில்லியில் அக்டோபர் 04 மற்றும் 05 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள “ஸ்வவ்லாம்பன்-2023” கருத்தரங்கின் போது சில நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பங்களின் நேரடி செயல் விளக்கம் உட்பட இந்த 75 முன்மாதிரிகளை காட்சிப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: indian navy
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!

Next Post

பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies