பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  
Jun 15, 2026, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  

Murugesan M by Murugesan M
Sep 19, 2023, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சொந்தமான நிறுவனமான தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (என்.எச்.எல்.எம்.எல்), பெங்களூருவில் ரூ. 1,770 கோடி மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டு செயல்பாட்டில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை (மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ – எம்.எம்.எல்.பி) மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அரசின் சிறப்புத் திட்டங்கள் அமைப்பு (எஸ்பிவி), பெங்களூரு எம்எம்எல்பி பிரைவேட் லிமிடெட் மற்றும் கன்செஸ்ஸனர் எஸ்பிவி மெஸர்ஸ் பாத் பெங்களூரு லாஜிஸ்டிக்ஸ் பார்க் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள முதலலிங்கனஹள்ளியில் 400 ஏக்கர் பரப்பளவில் எம்.எம்.எல்.பி உருவாக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் நாட்டில் செயல்படுத்தப்படும் முதல் மற்றும் மிகப்பெரிய எம்.எம்.எல்.பி.யாக இந்த திட்டம் அமையும்.

இது தேசிய நெடுஞ்சாலை 648, டபாஸ்பேட்டை முதல் ஓசூர் வரை மற்றும் வடக்கில் சாட்டிலைட் டவுன் ரிங் சாலை மற்றும் தெற்கில் பெங்களூரு – ஹூப்ளி – மும்பை ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ளது.

பெங்களூரு எம்.எம்.எல்.பி,  பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரு நகர ரயில் நிலையத்திலிருந்து 48 கிலோ மீ்ட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

எம்.எம்.எல்.பி மூன்று கட்டங்களாக உருவாக்கப்படும். முதல் கட்டம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எம்.எல்.பி 45 ஆண்டு காலம் முடிவதற்குள் சுமார் 30 மில்லியன் மெட்ரிக் டன் (எம்.எம்.டி) சரக்குகளை கையாளும். அத்துடன் பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற நீர்ப்பிடிப்பு பிராந்தியத்தில் உள்ள தொழில்துறை மண்டலங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (என்.எச்.எல்.எம்.எல்), ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்) மற்றும் கர்நாடகா தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் (கே.ஐ.ஏ.டி.பி) ஆகியவற்றுக்கு இடையில் ஒரு அரசு சிறப்புத் திட்ட அமைப்பு (எஸ்.பி.வி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சரக்குப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான மத்திய அரசாங்கத்தின் முக்கிய முன்முயற்சியாக எம்.எம்.எல்.பி. (Multi-Modal Logistics Parks)  எனப்படும் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைந்துள்ளது.

Tags: national high waynhai
ShareTweetSendShare
Previous Post

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!

Next Post

அம்மன் வேடத்தில் சோனியா காந்தி: பா.ஜ.க. கடும் கண்டனம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies