சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ தகவல்!
Jun 24, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ தகவல்!

5-வது முறையாக சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 19, 2023, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5-வது முறையாக உயர்த்தப்பட்டு சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்த்தப்பட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு ஆராய்ச்சியை நடத்தி வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட், ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது.

இதன் பிறகு, ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம், 4 மாத பயணத்திற்குப் பிறகு, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி தனது இலக்கை அடையும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. மேலும், லாக்ராஞ்சன் எல் 1 என்கிற இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு, அங்கிருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த 15-ம் தேதி 4-வது முறையாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை செப்டம்பர் 19-ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று 5-வது முறையாக ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருக்கும் தகவலில், “இன்று அதிகாலை 2 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5-வது முறையாக அதிகரிக்கப்பட்டது. தற்போது, சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக நகர்ந்திருக்கிறது. சுற்று வட்டப்பாதை உயர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளது” என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Tags: aditya spacecraft5th time orbit changetravel sun
ShareTweetSendShare
Previous Post

நள்ளிரவில் காவல்துறை மனித உரிமை மீறல் – இந்து முன்னணி கண்டனம்!

Next Post

மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!

Related News

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies