சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ தகவல்!
Aug 8, 2026, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ தகவல்!

5-வது முறையாக சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 19, 2023, 04:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5-வது முறையாக உயர்த்தப்பட்டு சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்த்தப்பட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு ஆராய்ச்சியை நடத்தி வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட், ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது.

இதன் பிறகு, ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம், 4 மாத பயணத்திற்குப் பிறகு, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி தனது இலக்கை அடையும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. மேலும், லாக்ராஞ்சன் எல் 1 என்கிற இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு, அங்கிருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த 15-ம் தேதி 4-வது முறையாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை செப்டம்பர் 19-ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று 5-வது முறையாக ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருக்கும் தகவலில், “இன்று அதிகாலை 2 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5-வது முறையாக அதிகரிக்கப்பட்டது. தற்போது, சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக நகர்ந்திருக்கிறது. சுற்று வட்டப்பாதை உயர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளது” என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Tags: aditya spacecraft5th time orbit changetravel sun
Share
Tweet
SendShare
Previous Post

நள்ளிரவில் காவல்துறை மனித உரிமை மீறல் – இந்து முன்னணி கண்டனம்!

Next Post

மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!

Related News

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies