நள்ளிரவில் காவல்துறை மனித உரிமை மீறல் - இந்து முன்னணி கண்டனம்!
Aug 8, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நள்ளிரவில் காவல்துறை மனித உரிமை மீறல் – இந்து முன்னணி கண்டனம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம், வ.களத்தூரில் நள்ளிரவில் காவல்துறையின் மனித உரிமை மீறல் நடைபெற்று உள்ளதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம் வ.களத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் (17.09.23) அன்று இந்துக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்குள் விநாயகர் திருமேனியை வைத்து கிராம பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

இதற்கு முறையாக ஆர்டிஓ (RDO) அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அனுமதி உண்டு, இல்லை என எழுத்துப்பூர்வமாகத் தகவல் ஆர்டிஓ (RDO) தரப்பில் தெரிவிக்கவில்லை.

மக்கள் வழிபாடு நடத்தும் போது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள், விநாயகர் திருமேனியை அகற்றச் சொன்னார்கள். பொது மக்களோ கோவிலுக்குள்தான் வைத்திருக்கிறோம், ஏன் எங்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லையா?5 என விநாயகர் திருமேனியை அகற்ற மறுத்துள்ளனர்.

பிறகு நள்ளிரவில் காவல்துறை குவிக்கப்பட்டு அங்கிருந்த பெண்களின் சேலையை உருவியும், அடித்தும் இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர்.

இதில் வயதான ஒபு பெண்ணை தள்ளிவிட்டதில் அவருக்கு முகத்தில் இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவி கூடச் செய்யாமல் கைது செய்துள்ளனர். பிறகு விடுவித்தனர்.

அங்கிருந்த இளைஞர்களை அடித்து தரதரவென இழுத்துச்சென்று காவல்துறையின் வாகனத்தில் அவர்களின் தலையை இடித்துக் காயப்படுத்தி கைது செய்தனர்.

நள்ளிரவில் மின்சாரம் இல்லாத நேரத்தில் பொதுமக்களை விநாயகர் வைத்து வழிபட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக காவல்துறை மிகவும் கொடூரமான முறையில் அராஜகப்போக்குடன் செயல்பட்டு உள்ளனர்.

அங்குப் பெண்களின் செல்போன்களை பிடுங்கி ரோட்டில் போட்டு உடைத்திருக்கிறார்கள். நள்ளிரவில் உடலளவிலும், மனதளவிலும் மனித உரிமைகளை காவல்துறை மீறியுள்ளது.

கைது செய்த பெண்களை காவல்துறை வண்டியில் ஏற்றி பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை காலால் உதைத்துத் துன்புறுத்தியிருக்கிறார் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி. காவல்துறையின் இந்த அராஜகத்தை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

காவல்துறை உங்கள் நண்பன் எனக் கூறிக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், இப்பிரச்சனையைக் கையாள தெரியாமல் அராஜகப்போக்கு உடன் செயல்பட்ட மங்களமேடு டிஎஸ்பி (DSP) சீராளன் மற்றும் பெரம்பலூர் டிஎஸ்பி (DSP) பழனிசாமி, காவல்துறை ஆய்வாளர் விஜயலட்சுமி, வ.களத்தூர் உதவி ஆய்வாளர் பார்த்திபன் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: hindu munnani
Share
Tweet
SendShare
Previous Post

அதிர்ச்சி : சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை!

Next Post

சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ தகவல்!

Related News

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies