நாயக்கர் கால கருப்புசாமி சிலை கண்டெடுப்பு !
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாயக்கர் கால கருப்புசாமி சிலை கண்டெடுப்பு !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை சிறுதூர் கண்ணனேந்தல் பகுதிக்கு உட்பட்ட பறையாத்திகுளம் கண்மாய் அருகே நாயக்கர் காலத்து கருப்பசாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கிக் கிடந்த சிலையை கண்ணனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்பாலகிருஷ்ணன், சி.எஸ்.ஜெகநாதன், பிரகாஷ், முத்துராமன் ஆகியோர் கண்டெடுத்து உள்ளனர்.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலையை ஒப்படைத்தனர். இந்த சிலை குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் து.முனீஸ்வரனிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டின் கிராமங்களில் பரவலாக காணப்படுகின்ற வழிபாட்டு முறையில் முக்கியமானது கருப்பசாமி வழிபாடு.

குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டார் பண்பாட்டு மரபு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராம காவல் தெய்வ வழிபாடுகளில் கருப்பசாமி, கருப்பன் எனவும் அழைக்கப்படுவதுண்டு. குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களால் கருப்பசாமி அழைக்கப்படுகிறார். பொதுவாக பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக உள்ளார்.

கண்டறியப்பட்ட சிலை நின்ற கோலத்தில் தலையில் பெரியத் தலைப்பாகை , நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கு கீழே பெருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இச்சிற்ப வடிவ அமைப்பை பொறுத்து நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும், இந்த சிலை குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Madurai
ShareTweetSendShare
Previous Post

மும்பை ஐ.ஐ.டி. மாணவருக்கு 3.7 கோடி சம்பளம்!

Next Post

மீண்டும் அணிக்கு திரும்பும் ஆல்ரவுண்டர் அஸ்வின் !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies