மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!
Oct 26, 2025, 04:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!

மாநிலங்களவையில் நிறைவேற்றியதற்கான ஆதாரத்தைக் கேட்டு ஆவேசம்!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது எனவும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு மத்திய உள்துறை அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் கேட்டபோது, இது எங்களுடைய மசோதா என்று கூறினார். அதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு உரிமை கொண்டாடினர்.

இந்த நிலையில், நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின்போது பேசிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “1996-ல் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையிலான காங்கிரஸ் அரசுகள் நிறைவேற்ற முயன்றன. சில முறை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. அதேசமயம், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. இதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார்” என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காங்கிரஸ் தலைமையான மத்திய அரசில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒருபோதும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதே இல்லை. அதேபோல, பழைய மசோதாவும் நிலுவையில் இல்லை. 2014-ம் ஆண்டு 15-வது மக்களவை கலைக்கப்பட்டவுடன், அந்த மசோதா காலாவதியாகி விட்டது. நாடாளுமன்றத்தில் கூறியதை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் இருந்தால் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான ஆதாரம் அவரிடம் இல்லா விட்டால், அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறினார்.

Tags: ParliamentSpeechAmitsha
ShareTweetSendShare
Previous Post

கேங்மேன் பணிக்கு 5,336 தேர்வாளர்களுக்குப் பணி வழங்காமல் வஞ்சிக்கிறது திமுக அரசு- அண்ணாமலை!

Next Post

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies