மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!
Jul 25, 2025, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!

மாநிலங்களவையில் நிறைவேற்றியதற்கான ஆதாரத்தைக் கேட்டு ஆவேசம்!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது எனவும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு மத்திய உள்துறை அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் கேட்டபோது, இது எங்களுடைய மசோதா என்று கூறினார். அதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு உரிமை கொண்டாடினர்.

இந்த நிலையில், நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின்போது பேசிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “1996-ல் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையிலான காங்கிரஸ் அரசுகள் நிறைவேற்ற முயன்றன. சில முறை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. அதேசமயம், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. இதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார்” என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காங்கிரஸ் தலைமையான மத்திய அரசில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒருபோதும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதே இல்லை. அதேபோல, பழைய மசோதாவும் நிலுவையில் இல்லை. 2014-ம் ஆண்டு 15-வது மக்களவை கலைக்கப்பட்டவுடன், அந்த மசோதா காலாவதியாகி விட்டது. நாடாளுமன்றத்தில் கூறியதை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் இருந்தால் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான ஆதாரம் அவரிடம் இல்லா விட்டால், அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறினார்.

Tags: AmitshaParliamentSpeech
ShareTweetSendShare
Previous Post

கேங்மேன் பணிக்கு 5,336 தேர்வாளர்களுக்குப் பணி வழங்காமல் வஞ்சிக்கிறது திமுக அரசு- அண்ணாமலை!

Next Post

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?

Related News

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies