மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!
Jul 29, 2026, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!

மாநிலங்களவையில் நிறைவேற்றியதற்கான ஆதாரத்தைக் கேட்டு ஆவேசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 20, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது எனவும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு மத்திய உள்துறை அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் கேட்டபோது, இது எங்களுடைய மசோதா என்று கூறினார். அதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு உரிமை கொண்டாடினர்.

இந்த நிலையில், நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின்போது பேசிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “1996-ல் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையிலான காங்கிரஸ் அரசுகள் நிறைவேற்ற முயன்றன. சில முறை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. அதேசமயம், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. இதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார்” என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காங்கிரஸ் தலைமையான மத்திய அரசில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒருபோதும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதே இல்லை. அதேபோல, பழைய மசோதாவும் நிலுவையில் இல்லை. 2014-ம் ஆண்டு 15-வது மக்களவை கலைக்கப்பட்டவுடன், அந்த மசோதா காலாவதியாகி விட்டது. நாடாளுமன்றத்தில் கூறியதை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் இருந்தால் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான ஆதாரம் அவரிடம் இல்லா விட்டால், அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறினார்.

Tags: ParliamentSpeechAmitsha
ShareTweetSendShare
Previous Post

கேங்மேன் பணிக்கு 5,336 தேர்வாளர்களுக்குப் பணி வழங்காமல் வஞ்சிக்கிறது திமுக அரசு- அண்ணாமலை!

Next Post

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies