மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!
Apr 29, 2026, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!

மாநிலங்களவையில் நிறைவேற்றியதற்கான ஆதாரத்தைக் கேட்டு ஆவேசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 20, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது எனவும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு மத்திய உள்துறை அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் கேட்டபோது, இது எங்களுடைய மசோதா என்று கூறினார். அதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு உரிமை கொண்டாடினர்.

இந்த நிலையில், நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின்போது பேசிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “1996-ல் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையிலான காங்கிரஸ் அரசுகள் நிறைவேற்ற முயன்றன. சில முறை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. அதேசமயம், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. இதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார்” என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காங்கிரஸ் தலைமையான மத்திய அரசில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒருபோதும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதே இல்லை. அதேபோல, பழைய மசோதாவும் நிலுவையில் இல்லை. 2014-ம் ஆண்டு 15-வது மக்களவை கலைக்கப்பட்டவுடன், அந்த மசோதா காலாவதியாகி விட்டது. நாடாளுமன்றத்தில் கூறியதை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் இருந்தால் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான ஆதாரம் அவரிடம் இல்லா விட்டால், அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறினார்.

Tags: ParliamentSpeechAmitsha
ShareTweetSendShare
Previous Post

கேங்மேன் பணிக்கு 5,336 தேர்வாளர்களுக்குப் பணி வழங்காமல் வஞ்சிக்கிறது திமுக அரசு- அண்ணாமலை!

Next Post

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies