ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?
Aug 18, 2025, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கேள்வி!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாதா என்று “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

1967-ம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது. ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு சில மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்ததால், சட்டமன்றங்களுக்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டிய சுழல் ஏற்பட்டது. எனினும், இன்னும் பல்வேறு மாநிலங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன்தான் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை பா.ஜ.க. முன்வைத்து வருகிறது.

அதே சமயம், இந்த ”ஒரே நாடு ஒரே தேர்தல்” முழக்கத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனினும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்று அதன் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார். இக்கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், நாடு முழுவதும் ஒரே நாளில் பண்டிகைகைள் கொண்டாடும்போது, ஏன் தேர்தலை நடத்த முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “நாம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம். அதேபோல கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளும் நாடு முழுவதும் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி இருக்க, நாம் ஏன் தேர்தல் நாளை ஒன்றாகக் கொண்டாட முடியாது. மேலும், பெண்களுக்கான அதிகாரம் குறித்து பேசிக்கொண்டு மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடி அரசு மசோதாவை தாக்கல் செய்து சரியான பதிலடி கொடுத்திருக்கிறது” என்றார்.

Tags: one nation one electionMadya PradeshGenaral Secratarybjp
ShareTweetSendShare
Previous Post

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!

Next Post

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் வணிகர்கள் திடீர் சாலை மறியல் – முழு விவரம்

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies