ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?
May 20, 2025, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கேள்வி!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாதா என்று “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

1967-ம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது. ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு சில மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்ததால், சட்டமன்றங்களுக்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டிய சுழல் ஏற்பட்டது. எனினும், இன்னும் பல்வேறு மாநிலங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன்தான் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை பா.ஜ.க. முன்வைத்து வருகிறது.

அதே சமயம், இந்த ”ஒரே நாடு ஒரே தேர்தல்” முழக்கத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனினும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்று அதன் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார். இக்கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், நாடு முழுவதும் ஒரே நாளில் பண்டிகைகைள் கொண்டாடும்போது, ஏன் தேர்தலை நடத்த முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “நாம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம். அதேபோல கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளும் நாடு முழுவதும் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி இருக்க, நாம் ஏன் தேர்தல் நாளை ஒன்றாகக் கொண்டாட முடியாது. மேலும், பெண்களுக்கான அதிகாரம் குறித்து பேசிக்கொண்டு மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடி அரசு மசோதாவை தாக்கல் செய்து சரியான பதிலடி கொடுத்திருக்கிறது” என்றார்.

Tags: bjpone nation one electionMadya PradeshGenaral Secratary
ShareTweetSendShare
Previous Post

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!

Next Post

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் வணிகர்கள் திடீர் சாலை மறியல் – முழு விவரம்

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies