ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?
Jan 14, 2026, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கேள்வி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 20, 2023, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாதா என்று “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

1967-ம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது. ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு சில மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்ததால், சட்டமன்றங்களுக்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டிய சுழல் ஏற்பட்டது. எனினும், இன்னும் பல்வேறு மாநிலங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன்தான் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை பா.ஜ.க. முன்வைத்து வருகிறது.

அதே சமயம், இந்த ”ஒரே நாடு ஒரே தேர்தல்” முழக்கத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனினும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்று அதன் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார். இக்கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், நாடு முழுவதும் ஒரே நாளில் பண்டிகைகைள் கொண்டாடும்போது, ஏன் தேர்தலை நடத்த முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “நாம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம். அதேபோல கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளும் நாடு முழுவதும் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி இருக்க, நாம் ஏன் தேர்தல் நாளை ஒன்றாகக் கொண்டாட முடியாது. மேலும், பெண்களுக்கான அதிகாரம் குறித்து பேசிக்கொண்டு மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடி அரசு மசோதாவை தாக்கல் செய்து சரியான பதிலடி கொடுத்திருக்கிறது” என்றார்.

Tags: bjpone nation one electionMadya PradeshGenaral Secratary
ShareTweetSendShare
Previous Post

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி!

Next Post

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் வணிகர்கள் திடீர் சாலை மறியல் – முழு விவரம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies