நீதி வழங்குவதில் தாமதம்: அமித்ஷா கவலை!
Nov 18, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதி வழங்குவதில் தாமதம்: அமித்ஷா கவலை!

தண்டனை விகிதமும் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 24, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடந்த வழக்கறிஞர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போதைய விதிமுறைகள்படி, நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், தண்டனை விகிதமும் குறைவாக இருப்பதால், சிறைகளில் விசாரணைக் கைதிகள் நிரம்பி வழிகின்றனர் என்று கூறியிருக்கிறார்.

அகில இந்திய பார் கவுன்சில் சார்பில், சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், பிரிட்டன் சட்ட அமைச்சர் அலெக்ஸ் சால்க் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இம்மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “நாட்டின் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றியதில் வழக்கறிஞர்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். பழங்காலத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பஞ்சாயத்து நடைமுறை அமலில் இருந்தது. அதனடிப்படையிலேயே, தற்போது லோக் அதாலத் நடைமுறை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்த நடைமுறையில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான மொழியில் சட்டங்கள் இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு புதிய சட்டங்கள் எளிமையான மொழியில் எழுதப்படுகின்றன. மேலும், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சட்டங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தரவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதன்மூலம் சமானிய மக்களும் தீர்ப்புகளைப் படித்து புரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக உச்ச நீதிமன்றத்தை மனதாரப் பாராட்டுகிறேன்.

சர்வதேச அளவில் சைபர் தாக்குதல், செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்துவது, பண மோசடி உள்ளிட்ட பிரச்சனைகள் மிகப்பெரிய சவால்களாக உருவெடுத்து வருகின்றன. இப்பிரச்சனைகளுக்கு ஒரு நாடு, ஒரு அரசால் தீர்வு காண முடியாது. ஆகவே, சர்வதேச அளவில் வலுவான சட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு புதிய பாதை திறக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு நிலவின் தென் துருவத்தில் இந்தியா வெற்றிகரமாக கால் பதித்தது. இதுபோல் பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வரும் இந்தியா, வரும் 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக உருவெடுக்கும்” என்றார்.

மாநாட்டின் நிறைவு நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசுகையில், “தற்போதைய விதிமுறைகள்படி, நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதேசமயம், தண்டனை விகிதமும் குறைவாக இருப்பதால், சிறைகளில் விசாரணைக் கைதிகள் நிரம்பி வழிகின்றனர். இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில், சட்டம் காலனித்துவம் கொண்டதாக இருந்தது. ஆகவே, குற்றவியல் நீதி அமைப்பில் 3 புதிய சட்டங்கள் வரவிருக்கின்றன. இந்த 3 புதிய சட்டங்களும் காலனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காது. அதேபோல, தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய சட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மின்னணு மற்றும் டிஜிட்டல் பதிவுகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் சாதனங்களில் கிடைக்கும் ஆதாரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.

Tags: Amit shainternational lawyers conference
ShareTweetSendShare
Previous Post

இரயில்வே துறையில் வரலாறு காணாத மாற்றம்: ஜெ.பி.நட்டா பெருமிதம்!

Next Post

“அமிர்த பாரத நிலையங்கள்”: பிரதமர் மோடி!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies