இரயில்வே துறையில் வரலாறு காணாத மாற்றம்: ஜெ.பி.நட்டா பெருமிதம்!
Jun 23, 2026, 09:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரயில்வே துறையில் வரலாறு காணாத மாற்றம்: ஜெ.பி.நட்டா பெருமிதம்!

ஆத்ம நிர்பர் பாரத் இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 08:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக் கண்டிருப்பதாகவும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

இரயில்கள் மற்றும் இரயில் நிலையங்களின் தரம், சேவை உள்ளிட்டவற்றை உயர்த்தும் வகையில், அதிநவீன வசதிகளுடன் வந்தே பாரத் இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, இரயில் நிலையங்களும் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏற்கெனவே 25 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, 500-க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் லிப்ஃட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் உட்பட 9 வழித்தடங்களில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடியே காணொளிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் இரயில்கள் மூலம் பயண நேரம் குறையும் என்று கூறியதோடு, அமிர்த காலத்தில் கட்டப்படும் இரயில் நிலையங்கள் அமிர்த பாரத நிலையங்கள் என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த சூழலில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக கண்டிருப்பதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெ.பி.நட்டா வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேம்பட்ட மற்றும் உள்நாட்டு தயாரிப்பான இரயில், இந்தியாவில் இரயில் பயணத்தின் இயக்கவியலை மாற்றி இருக்கிறது. மேலும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இரயில்வேயின் முன்னேற்றங்கள் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும். வளர்ந்த இந்தியாவை அடைவதில் முன்னேற்றம் அடைய உதவும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் எங்கள் இரயில்வே முன்னோடியில்லாத மாற்றத்தைக் கண்டிருக்கிறது. மேலும், எங்கள் இரயில் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும், எங்கள் மக்களின் பயணத்தை எளிதாக்குவதிலும் நாங்கள் விரைவான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம். அமிர்த காலத்தில் நாங்கள் எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, ​​மகத்தான முன்னேற்றங்களை அடைகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM Modivande bharat trainPraisedJ.P.Nadda
ShareTweetSendShare
Previous Post

வாட்ஸ் அப் புதிய அப்டேட் : குரூப் கால்களில் இனி 31 பேர் பேசலாம்

Next Post

நீதி வழங்குவதில் தாமதம்: அமித்ஷா கவலை!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies