இரயில்வே துறையில் வரலாறு காணாத மாற்றம்: ஜெ.பி.நட்டா பெருமிதம்!
Jul 25, 2025, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரயில்வே துறையில் வரலாறு காணாத மாற்றம்: ஜெ.பி.நட்டா பெருமிதம்!

ஆத்ம நிர்பர் பாரத் இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு!

Web Desk by Web Desk
Sep 24, 2023, 08:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக் கண்டிருப்பதாகவும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

இரயில்கள் மற்றும் இரயில் நிலையங்களின் தரம், சேவை உள்ளிட்டவற்றை உயர்த்தும் வகையில், அதிநவீன வசதிகளுடன் வந்தே பாரத் இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, இரயில் நிலையங்களும் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏற்கெனவே 25 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, 500-க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் லிப்ஃட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் உட்பட 9 வழித்தடங்களில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடியே காணொளிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் இரயில்கள் மூலம் பயண நேரம் குறையும் என்று கூறியதோடு, அமிர்த காலத்தில் கட்டப்படும் இரயில் நிலையங்கள் அமிர்த பாரத நிலையங்கள் என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த சூழலில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக கண்டிருப்பதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெ.பி.நட்டா வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேம்பட்ட மற்றும் உள்நாட்டு தயாரிப்பான இரயில், இந்தியாவில் இரயில் பயணத்தின் இயக்கவியலை மாற்றி இருக்கிறது. மேலும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இரயில்வேயின் முன்னேற்றங்கள் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும். வளர்ந்த இந்தியாவை அடைவதில் முன்னேற்றம் அடைய உதவும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் எங்கள் இரயில்வே முன்னோடியில்லாத மாற்றத்தைக் கண்டிருக்கிறது. மேலும், எங்கள் இரயில் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும், எங்கள் மக்களின் பயணத்தை எளிதாக்குவதிலும் நாங்கள் விரைவான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம். அமிர்த காலத்தில் நாங்கள் எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, ​​மகத்தான முன்னேற்றங்களை அடைகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM Modivande bharat trainPraisedJ.P.Nadda
ShareTweetSendShare
Previous Post

வாட்ஸ் அப் புதிய அப்டேட் : குரூப் கால்களில் இனி 31 பேர் பேசலாம்

Next Post

நீதி வழங்குவதில் தாமதம்: அமித்ஷா கவலை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies