ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!
Jun 3, 2025, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!

கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஆயுதக் குவியல்கள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Sep 25, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் கடந்த 12-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிர தேடுகல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இராணுவ கர்னல், மேஜர், வீரர் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. என 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கூடுதல் இராணுவம் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகள் வேட்டை தொடங்கியது. ஒரு வாரம் நீடித்த தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட மொத்த தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், எல்லைப் பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையிலும், பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய ரிசர்வ் காவல்துறையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் 5 பேரை கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்ட 5 பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும், அவர்களதுபெயர் ஆதில் ஹுசைன் வானி, சுஹைல் அஹ்மத் தர், ஐத்மத் அஹ்மத் லாவே, மெஹ்ராஜ் அஹ்மத் லோன் மற்றும் சப்சார் அஹ்மத் கர் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள், ஒரு யு.பி.ஜி.எல்., 2 கைத்துப்பாக்கி மேகசின்கள், 12 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 21 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கைமோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: jammu kashmirKulgam5 terroristArrest
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!

Next Post

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!

Related News

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies