ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!
Sep 8, 2025, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!

கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஆயுதக் குவியல்கள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Sep 25, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் கடந்த 12-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிர தேடுகல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இராணுவ கர்னல், மேஜர், வீரர் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. என 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கூடுதல் இராணுவம் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகள் வேட்டை தொடங்கியது. ஒரு வாரம் நீடித்த தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட மொத்த தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், எல்லைப் பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையிலும், பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய ரிசர்வ் காவல்துறையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் 5 பேரை கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்ட 5 பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும், அவர்களதுபெயர் ஆதில் ஹுசைன் வானி, சுஹைல் அஹ்மத் தர், ஐத்மத் அஹ்மத் லாவே, மெஹ்ராஜ் அஹ்மத் லோன் மற்றும் சப்சார் அஹ்மத் கர் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள், ஒரு யு.பி.ஜி.எல்., 2 கைத்துப்பாக்கி மேகசின்கள், 12 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 21 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கைமோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: Arrestjammu kashmirKulgam5 terrorist
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!

Next Post

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!

Related News

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies