ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!
Jan 14, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!

கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஆயுதக் குவியல்கள் பறிமுதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 25, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் கடந்த 12-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிர தேடுகல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இராணுவ கர்னல், மேஜர், வீரர் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. என 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கூடுதல் இராணுவம் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகள் வேட்டை தொடங்கியது. ஒரு வாரம் நீடித்த தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட மொத்த தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், எல்லைப் பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையிலும், பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய ரிசர்வ் காவல்துறையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் 5 பேரை கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்ட 5 பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும், அவர்களதுபெயர் ஆதில் ஹுசைன் வானி, சுஹைல் அஹ்மத் தர், ஐத்மத் அஹ்மத் லாவே, மெஹ்ராஜ் அஹ்மத் லோன் மற்றும் சப்சார் அஹ்மத் கர் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள், ஒரு யு.பி.ஜி.எல்., 2 கைத்துப்பாக்கி மேகசின்கள், 12 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 21 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கைமோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: Arrestjammu kashmirKulgam5 terrorist
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!

Next Post

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies