ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!
Jul 26, 2025, 07:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!

பரிவர்தன் சங்கல்ப் மகாசபா கூட்டத்தில் ஆவேசம்!

Web Desk by Web Desk
Sep 25, 2023, 07:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆகவே, ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. மேலும், பா.ஜ.க. சார்பில் பல்வேறு யாத்திரைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், ஜெய்ப்பூரில் பரிவர்தன் சங்கல்ப் மகாசபா என்கிற பெயரில் ஒரு மெகா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை நடத்திய விதத்திற்காக ஒரு பெரிய பூஜ்ஜியத்தைப் பெற வேண்டும். ராஜஸ்தான் மக்கள் கெலாட் அரசை அகற்றி பா.ஜ.க.வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அசோக் கெலாட் அரசு அம்மாநில இளைஞர்களின் 5 ஆண்டு காலத்தை வீணடித்திருக்கிறது. ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.
எங்களது ‘பரிவர்தன் யாத்திரை’ மூலம் ராஜஸ்தானில் ஏற்படும் மாற்றத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடைபெற்ற மாற்றத்திற்கான அணிவகுப்பு, மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. யாத்திரையின்போது எங்களுக்குக் கிடைத்த பாராட்டும், வரவேற்பும் மாநிலத்தில் மாறிவரும் அரசியல் தலையெழுத்துக்கான அறிகுறியாகும். இந்தியா தலைமையில் நடத்தப்பட்ட ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றியைக் கண்டு, டெல்லியின் நண்பர்களாக இல்லாத நாடுகள் வியந்து போயிருக்கின்றன. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது யார்? நான் அல்ல, உங்களது ஆதரவால்தான் இது சாத்தியமானது.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் உத்தரவாதம் அளித்தோம். இன்று, ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அனைவரும் பார்க்கலாம். காங்கிரசால் 30 ஆண்டுகளுக்கு முன்பே மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. காங்கிரஸ் மற்றும் ‘திமிர்’ கூட்டணிக் கட்சிகள் பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள். ஆகவே, காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜிய மதிப்பெண்கள்தான் கிடைக்க வேண்டும். ராஜஸ்தான் மக்கள் கெலாட் அரசை அகற்றி பாஜ.க.வை மீண்டும் கொண்டு வர முடிவு செய்து விட்டனர்” என்றார்.

Tags: PM ModiSpeechRajasthan
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!

Next Post

இந்திய மாணவர்களுக்கு 3 மாதத்தில் 90 ஆயிரம்  விசா வழங்கிய அமெரிக்கா!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies