ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!
Mar 15, 2026, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!

பரிவர்தன் சங்கல்ப் மகாசபா கூட்டத்தில் ஆவேசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 25, 2023, 07:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆகவே, ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. மேலும், பா.ஜ.க. சார்பில் பல்வேறு யாத்திரைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், ஜெய்ப்பூரில் பரிவர்தன் சங்கல்ப் மகாசபா என்கிற பெயரில் ஒரு மெகா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை நடத்திய விதத்திற்காக ஒரு பெரிய பூஜ்ஜியத்தைப் பெற வேண்டும். ராஜஸ்தான் மக்கள் கெலாட் அரசை அகற்றி பா.ஜ.க.வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அசோக் கெலாட் அரசு அம்மாநில இளைஞர்களின் 5 ஆண்டு காலத்தை வீணடித்திருக்கிறது. ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.
எங்களது ‘பரிவர்தன் யாத்திரை’ மூலம் ராஜஸ்தானில் ஏற்படும் மாற்றத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடைபெற்ற மாற்றத்திற்கான அணிவகுப்பு, மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. யாத்திரையின்போது எங்களுக்குக் கிடைத்த பாராட்டும், வரவேற்பும் மாநிலத்தில் மாறிவரும் அரசியல் தலையெழுத்துக்கான அறிகுறியாகும். இந்தியா தலைமையில் நடத்தப்பட்ட ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றியைக் கண்டு, டெல்லியின் நண்பர்களாக இல்லாத நாடுகள் வியந்து போயிருக்கின்றன. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது யார்? நான் அல்ல, உங்களது ஆதரவால்தான் இது சாத்தியமானது.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் உத்தரவாதம் அளித்தோம். இன்று, ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அனைவரும் பார்க்கலாம். காங்கிரசால் 30 ஆண்டுகளுக்கு முன்பே மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. காங்கிரஸ் மற்றும் ‘திமிர்’ கூட்டணிக் கட்சிகள் பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள். ஆகவே, காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜிய மதிப்பெண்கள்தான் கிடைக்க வேண்டும். ராஜஸ்தான் மக்கள் கெலாட் அரசை அகற்றி பாஜ.க.வை மீண்டும் கொண்டு வர முடிவு செய்து விட்டனர்” என்றார்.

Tags: PM ModiSpeechRajasthan
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!

Next Post

இந்திய மாணவர்களுக்கு 3 மாதத்தில் 90 ஆயிரம்  விசா வழங்கிய அமெரிக்கா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies