ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!
Jul 24, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!

நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் தகவல்!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று கனடாவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி இருக்கிறார்.

காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூலை மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தால் தூதர்கள் வெளியேற்றம், விசா நிறுத்தம் என இரு நாட்டு இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ‘வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் விவாதத்தில்’ பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கனடா அரசு இதுவரை எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. கனடாவில் கடந்த சில ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் நிறைய நடந்திருக்கிறது.

இதுகுறித்து அந்நாட்டு அரசுக்கு பல்வேறு தகவல்களை அளித்திருக்கிறோம். தீவிரவாதத் தலைவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களை ஒப்படைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், கனடா அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக இது அனுமதிக்கப்படுகிறது என்பதே எங்களது கவலை.

எங்களது இராஜதந்திரிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதும், எங்களது துணை தூதரகங்கள் தாக்கப்படும் சூழலும் நிலவுகிறது. ஆகவே, உங்களிடம் குறிப்பிட்ட ஏதாவது ஆதாரம் இருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் தொடர்புடையதாக இருந்தாலோ எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அதைத் தெரிந்துகொள்ளவும், நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒரு விதத்தில் திருப்பம் இல்லாமல் படம் முழுமையடையாது” என்று கூறியிருக்கிறார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் குறித்து என்னிடம் கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது. நான் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவன் இல்லை என்று காட்டமாக பதிலளித்தார்.

Tags: NewyorkCentral MinisterJaishankar
ShareTweetSendShare
Previous Post

சச்சினின் சதத்தை முறியடிப்பதில் கோலிக்கு எண்ணம் இல்லை – டி வில்லியர்ஸ்

Next Post

உலகக் கோப்பை போட்டியில் அஸ்வின் விளையாடயாடுவாரா ?

Related News

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies