ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!
Oct 26, 2025, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!

நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் தகவல்!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று கனடாவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி இருக்கிறார்.

காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூலை மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தால் தூதர்கள் வெளியேற்றம், விசா நிறுத்தம் என இரு நாட்டு இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ‘வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் விவாதத்தில்’ பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கனடா அரசு இதுவரை எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. கனடாவில் கடந்த சில ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் நிறைய நடந்திருக்கிறது.

இதுகுறித்து அந்நாட்டு அரசுக்கு பல்வேறு தகவல்களை அளித்திருக்கிறோம். தீவிரவாதத் தலைவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களை ஒப்படைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், கனடா அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக இது அனுமதிக்கப்படுகிறது என்பதே எங்களது கவலை.

எங்களது இராஜதந்திரிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதும், எங்களது துணை தூதரகங்கள் தாக்கப்படும் சூழலும் நிலவுகிறது. ஆகவே, உங்களிடம் குறிப்பிட்ட ஏதாவது ஆதாரம் இருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் தொடர்புடையதாக இருந்தாலோ எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அதைத் தெரிந்துகொள்ளவும், நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒரு விதத்தில் திருப்பம் இல்லாமல் படம் முழுமையடையாது” என்று கூறியிருக்கிறார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் குறித்து என்னிடம் கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது. நான் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவன் இல்லை என்று காட்டமாக பதிலளித்தார்.

Tags: Central MinisterJaishankarNewyork
ShareTweetSendShare
Previous Post

சச்சினின் சதத்தை முறியடிப்பதில் கோலிக்கு எண்ணம் இல்லை – டி வில்லியர்ஸ்

Next Post

உலகக் கோப்பை போட்டியில் அஸ்வின் விளையாடயாடுவாரா ?

Related News

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies