வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!

ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் வளர்ச்சியடைவதற்கு அன்றைய காங்கிரஸ் அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. ஆகவே, குஜராத்தில் முதலீடு செய்ய விடாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரில் “துடிப்பான குஜராத்” (வைபரண்ட் குஜராத்) என்கிற உச்சி மாநாடு இன்று நடந்தது. இம்மாநாட்டில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 20 ஆண்டுகால துடிப்பான குஜராத் உச்சி மாநாடு மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல். துடிப்பான குஜராத் என்பது உலகின் கண்களுக்கு வெறும் பிராண்டிங் திட்டமாகத் தெரியலாம். ஆனால், இது நமக்குள் இருக்கும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் பிணைப்புத் திட்டமாகும்.

மேலும், இத்திட்டம் குஜராத்தின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு சேனலாகவும், உலகின் கண்களுக்கு பேசுபொருளான சேனலாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டைப் பார்த்து பிற மாநிலங்களும் இதுபோன்ற உச்சி மாநாடு திட்டத்தை தொடங்கி இருக்கின்றன. கடந்த ஆட்சியாளர்கள் (காங்கிரஸ்) குஜராத்தின் வளர்ச்சியை அரசியலோடு தொடர்புபடுத்தினார்கள். குஜராத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, துடிப்பான குஜராத் திட்டத்தை தொடங்கியபோது, இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் அமைச்சர்கள் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர். மேலும், குஜராத்தில் முதலீடு செய்ய வந்த முதலீட்டாளர்களை மிரட்டி தடுக்க முயன்றனர். ஆனால், நாங்கள் குஜராத்தை மறுவடிவமைத்ததோடு, மாநிலத்தின் எதிர்காலம் குறித்தும் சிந்தித்தோம். இதன் விளைவாக, எதிர்ப்பை மீறி முதலீட்டாளர்கள் வருகை தந்தனர்.

மேலும், துடிப்பான குஜராத் திட்டம் தொடங்கப்பட்டபோது, வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கக் கூடிய பெரிய ஹோட்டல்கள் குஜராத்தில் இல்லை. இதனால், அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்கவைத்தோம். ஒருகட்டத்தில் அவையும் நிரம்பி விட்டதால், பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைகள் பயன்படுத்தினோம்.

ஒவ்வொரு செயலும் 3 நிலைகளைக் கடந்து வருகிறது என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். முதலாவது, அத்திட்டம் கேலி செய்யப்படும். இரண்டாவது, எதிர்க்கப்படும். மூன்றாவது ஏற்றுக்கொள்ளப்படும். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பையும் மீது துடிப்பான குஜராத் திட்டம் வெற்றிபெற்று, தற்போது உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், குஜராத் முதல்வர் பூரேந்திர படேல், ஆளுநர் ஆச்சாரியா தேவவ்ரத் மற்றும் தொழில் சங்கங்கள், வர்த்தக மற்றும் வர்த்தக துறையின் முக்கிய பிரமுகர்கள், இளம் தொழில் முனைவோர், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், 20-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், அறிவியல் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரோபோ கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

Tags: PM ModiVibrant Gujrat
ShareTweetSendShare
Previous Post

டி20 : மங்கோலிய அணி தோல்வி !

Next Post

186 ஏக்கர் நிலத்தை சுருட்டிய திமுக எம்பி – அதிர்ச்சிப் பின்னணி!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies