வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!
Apr 29, 2026, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!

ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் வளர்ச்சியடைவதற்கு அன்றைய காங்கிரஸ் அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. ஆகவே, குஜராத்தில் முதலீடு செய்ய விடாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரில் “துடிப்பான குஜராத்” (வைபரண்ட் குஜராத்) என்கிற உச்சி மாநாடு இன்று நடந்தது. இம்மாநாட்டில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 20 ஆண்டுகால துடிப்பான குஜராத் உச்சி மாநாடு மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல். துடிப்பான குஜராத் என்பது உலகின் கண்களுக்கு வெறும் பிராண்டிங் திட்டமாகத் தெரியலாம். ஆனால், இது நமக்குள் இருக்கும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் பிணைப்புத் திட்டமாகும்.

மேலும், இத்திட்டம் குஜராத்தின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு சேனலாகவும், உலகின் கண்களுக்கு பேசுபொருளான சேனலாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டைப் பார்த்து பிற மாநிலங்களும் இதுபோன்ற உச்சி மாநாடு திட்டத்தை தொடங்கி இருக்கின்றன. கடந்த ஆட்சியாளர்கள் (காங்கிரஸ்) குஜராத்தின் வளர்ச்சியை அரசியலோடு தொடர்புபடுத்தினார்கள். குஜராத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, துடிப்பான குஜராத் திட்டத்தை தொடங்கியபோது, இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் அமைச்சர்கள் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர். மேலும், குஜராத்தில் முதலீடு செய்ய வந்த முதலீட்டாளர்களை மிரட்டி தடுக்க முயன்றனர். ஆனால், நாங்கள் குஜராத்தை மறுவடிவமைத்ததோடு, மாநிலத்தின் எதிர்காலம் குறித்தும் சிந்தித்தோம். இதன் விளைவாக, எதிர்ப்பை மீறி முதலீட்டாளர்கள் வருகை தந்தனர்.

மேலும், துடிப்பான குஜராத் திட்டம் தொடங்கப்பட்டபோது, வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கக் கூடிய பெரிய ஹோட்டல்கள் குஜராத்தில் இல்லை. இதனால், அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்கவைத்தோம். ஒருகட்டத்தில் அவையும் நிரம்பி விட்டதால், பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைகள் பயன்படுத்தினோம்.

ஒவ்வொரு செயலும் 3 நிலைகளைக் கடந்து வருகிறது என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். முதலாவது, அத்திட்டம் கேலி செய்யப்படும். இரண்டாவது, எதிர்க்கப்படும். மூன்றாவது ஏற்றுக்கொள்ளப்படும். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பையும் மீது துடிப்பான குஜராத் திட்டம் வெற்றிபெற்று, தற்போது உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், குஜராத் முதல்வர் பூரேந்திர படேல், ஆளுநர் ஆச்சாரியா தேவவ்ரத் மற்றும் தொழில் சங்கங்கள், வர்த்தக மற்றும் வர்த்தக துறையின் முக்கிய பிரமுகர்கள், இளம் தொழில் முனைவோர், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், 20-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், அறிவியல் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரோபோ கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

Tags: PM ModiVibrant Gujrat
ShareTweetSendShare
Previous Post

டி20 : மங்கோலிய அணி தோல்வி !

Next Post

186 ஏக்கர் நிலத்தை சுருட்டிய திமுக எம்பி – அதிர்ச்சிப் பின்னணி!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies