குஜராத் மாநிலத்திற்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, ஏராளனமான பெண்கள் வழிநெடுகிலும் நின்று வரவேற்பு அட்டைகளை ஏந்தியும், மலர்தூவியும் வரவேற்பு அளித்து வழிநடத்தினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள அறிவியல் நகரில் துடிப்பான குஜராத் 20-வது உச்சிமாநாடு இன்று காலை நடந்தது. இதற்காக நேற்று மாலை குஜராத் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, இரவு காந்திநகரில் தங்கினார். பின்னர், இன்று காலையில் துடிப்பான குஜராத் 20-வது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் வதோதராவில் பிரம்மாண்ட ரோடு ஷோவை பிரதமர் மோடி நடத்தினார். இந்த ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் வந்த பிரதமர் மோடிக்கு, ஏராளமான பெண்கள் மலர்தூவியும், வரவேற்பு அட்டைகளை ஏந்தியும் வரவேற்பு அளித்தனர்.
மேலும், பிரதமர் மோடியின் வாகனத்துக்கு முன்பு கோஷமிட்டபடியே, அணிவகுத்துச் சென்று வாகனத்தை வழிநடத்தினர்.