தமிழகத்தில் பாஜகவைப் பலப்படுத்தும் வகையில், 3 -வது கட்ட என் மண் என் மக்கள் யாத்திரை வரும் 4 -ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவங்க உள்ளது.
தமிழகத்தில் பாஜகவைப் பலப்படுத்தும் வகையில், என் மண் என் மக்கள் என்ற தலைப்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், கடந்த ஜூன் 28 -ம் தேதி என் மண் என் மக்கள் முதற்கட்ட யாத்திரையை மத்திய அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார். பல்வேறு சட்டமன்றத் தொகுதிகள் வழியாக இந்த யாத்திரை வெற்றிகரமாக ஆகஸ்ட் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து, என் மண் என் மக்கள் 2-ம் கட்ட யாத்திரை செப்டம்பர் 4-ம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கியது. முக்கிய சட்டமன்றத் தொகுதிகள் வழியாகச் சென்று நீலகிரி மாவட்டத்தில் நிறைவு பெற்றது.
இந்தநிலையில், என் மண் என் மக்கள் 3-ம் கட்ட யாத்திரை வரும் அக்டோபர் 4 -ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவங்க உள்ளது. வரும் 31 -ம் தேதி தஞ்சையில் நிறைவு பெறுகிறது.
என் மண் என் மக்கள் யாத்திரை செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பொது மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.