ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா 14 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தை வென்றது.
Proud of @Sarabjotsingh30 and @DivyaTSD for winning the Silver medal in the 10m Air Pistol Mixed team event at the Asian Games 2022. I congratulate them for their accomplishment. Their talent, dedication and teamwork are commendable and motivating for the youth of India. pic.twitter.com/IvB5TSBPvw
— Narendra Modi (@narendramodi) September 30, 2023
இந்த வெற்றிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இது குறித்து அவர், ” ஆசிய விளையாட்டுப் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் மேலும் நான் அவர்களை நினைத்து பெருமைப் படுகிறேன். அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணி பாராட்டத்தக்கது மற்றும் இந்திய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது ” என்று பாராட்டியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர், ” ஆசிய விளையாட்டுப் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா ஆகிய இருவருக்கும் இப்போட்டியில் வெற்றி பெற்றதற்கும் மேலும் உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.