தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா!
Jul 26, 2025, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா!

இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த இணையமைச்சர் எல். முருகன்!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உஸ்பெகிஸ்தானில் 15 வது தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவின் (டி.ஐ.எஃப்.எஃப்) தொடக்க விழாவில்  இந்தியாவின் சார்பாக தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆடியோ-விஷுவல் துறையில் காணப்படும் மகத்தான வளர்ச்சி குறித்து முருகன் உஸ்பெகிஸ்தான் தரப்பிற்கு விளக்கினார்.

இந்தியக் குழுவில் மூத்த திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான உமேஷ் மெஹ்ரா மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக (என்.எஃப்.டி.சி) அதிகாரிகள்  பங்கேற்றனர்.

இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் சோவியத் யூனியன் காலத்தில் இருந்து, திரைப்படத் தயாரிப்பில் வலுவான ஒத்துழைப்புப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. என்.எஃப்.டி.சி மற்றும் உஸ்பெகிஸ்தான் கினோ (உஸ்பெக் பிலிம்ஸ்) ஆகியவற்றின் கூட்டு செயல்பாடுகளால் இந்த ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, உஸ்பெகிஸ்தான் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஒசோத்பெக் நாசர்பெகோவை அமைச்சர் முருகன் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பு மற்றும் ஒத்துழைப்பை இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். மேலும் திரைப்படத் தயாரிப்பு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் இந்தியாவின் ஆக்கபூர்வமான பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான இந்திய அரசின் வலுவான கொள்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தியாவின் ஆடியோ-விஷுவல் துறையில் காணப்படும் மகத்தான வளர்ச்சி குறித்து முருகன் உஸ்பெகிஸ்தான் தரப்பிற்கு விளக்கினார்.

கூட்டுத் தயாரிப்பு, படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தையப் பணிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த திரைப்படத் துறையினர் மற்றும் மாணவர்களுக்கு இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பயிற்சி அளிக்க இந்தியா தயாராக உள்ளது என இந்தச் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.

தாஷ்கண்ட் திரைப்பட விழாவின் போது, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துணை அமைச்சர்    பி. மும்கு தலைமையிலான துருக்கிய தூதுக்குழுவையும் எல். முருகன் சந்தித்தார்.

இந்தியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கான சிறந்த வாய்ப்புகள் குறித்தும், இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவது குறித்தும் துருக்கி தரப்புக்கு இந்தச் சந்திப்பின்போது விளக்கிக் கூறப்பட்டது.

Tags: L MuruganTashkent International Film Festival
ShareTweetSendShare
Previous Post

கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக்கூடாது: வங்கதேச அமைச்சர் ஆவேசம்!

Next Post

குளு குளு கொடைக்கானல்: குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies