மகளிர் இடஓதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏன் மசோதாவை தாக்கல் செய்ய முன்வரவில்லை என பாஜக செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் உரிமை அளித்தல் என எதையும் காங்கிரஸ் அரசு கடுகு அளவும் செய்யவில்லை. அப்படி இருக்கையில், பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியும், ப.சிதம்பரமும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர். இப்போது, காங்கிரஸ் என்ற கட்சியையே மறந்துவிட்டனர்.
கடந்த 2010-ம் ஆண்டு பாஜக ஆதரவோடு ராஜ்ய சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. மகளிர்மேல் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான அக்கரை இருந்தால், அவர்கள் அதை லோக்சபாவில் நிறைவேற்றி இருக்கலாமே. ஏன் தடுத்தார்கள். சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, காங்கிரஸ் அதைச் செய்யவில்லை.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக கொண்டு வந்தபோது, அதை ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்பி மசோதாவைக் கிழித்து எரிந்தார்.
பிரதமர் மோடி பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான், அவர் சொன்னதைச் செய்துள்ளார். ஆனால், இந்தியா கூட்டணி பெண்களை அவமதிக்கிறது என்றார்.