காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட புகாரில், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட புகாரில், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
@BJYMinTN சமூக வலைத்தள பொறுப்பாளர் @SanghiPrince பிரவீன் அவர்களை இன்று அதிகாலை 3:30 மணி அளவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அடக்குமுறை விடியா ஆட்சியில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பொருட்டு முன்று மாதம் முன் செய்த கீச்சுக்கு… pic.twitter.com/x3kAxnAMhS
— Senthilnathan (@VVSenthilnathan) October 1, 2023
பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் கைதுக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொது வெளியில், வைக்கப்படும் விமர்ச்சனங்களைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், பாஜக நிர்வாகிகளைத் தொடர்ந்து, தமிழக அரசு நிர்வாகம் தொடர்ந்து கைது செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சமூக வலைத்தள பொறுப்பாளர் பிரவீன் அவர்களை இன்று அதிகாலை 3:30 மணி அளவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அடக்குமுறை, திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பொருட்டு முன்று மாதம் முன் செய்த கீச்சுக்கு இன்று (அதாவது விடுமுறை தினத்தன்று) கைது செய்யபட்டது ஏன்? உடனடியாக ஜாமின் கிடைத்திட கூடாது என்பதற்காகவா..? அராஜக ஆட்சிக்கு விரைவில் முடிவுரை எழுதுவார்கள் என தெரிவித்துள்ளார்.