மல்யுத்த வீரருடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!
Jul 27, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மல்யுத்த வீரருடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

தூய்மைக்கு அப்பால் உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு என்று ட்வீட்!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மை இயக்கத்தை முன்னிட்டு, டெல்லியில் பிரபல மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 1-ம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை இயக்கத்தில் பங்கேற்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, இன்று நாடு முழுவதும் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றனர்.

அந்த வகையில், டெல்லியில் பாரதப் பிரதமர் மோடி,  பிரபல மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இந்த அங்கித் பையன் பூரியா யாரென்றால், 75 நாள் சவால் என்கிற பெயரில், ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் அவருக்கு 49 லட்சம் பின்தொடர்வாளர்கள் கிடைத்தார்கள். கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கிய இந்த சவாலை, கடந்த செப்டம்பர் 11-ம் தேதி நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமானார்.

இந்த நிலையில், அங்கித் பையன் பூரியாவுடன் தூய்மைப் பணியைத் தொடங்கிய பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “தூய்மையே சேவை இயக்கத்தில் தேசம் கவனம் செலுத்துகையில், அங்கித் பையன் பூரியாவும் நானும் அப்பணியில் ஈடுபட்டோம். தூய்மைக்கு அப்பால், உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், அப்பதிவில் காணொளி ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டிருக்கிறார். 4 நிமிடம் 41 வினாடிகள் ஓடும் அந்தக் காணொளி, “இன்று நான் உங்களிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்கிறேன்” என்று அங்கித் பையன் பூரியிடம், பிரதமர் மோடி கூறுவதுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, “ஸ்வச்சதா அபியான் எவ்வாறு உடற்தகுதிக்கு உதவும்” என்று பிரதமர் மோடி கேட்கிறார். அதற்கு, “சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை. சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருந்தால் நாமும் ஆரோக்கியமாக இருப்போம்” என்று அங்கித் பதிலளிக்கிறார்.

பிறகு, “சோனிபட்டில் உள்ள தனது கிராமத்தில் தூய்மை குறித்த விழிப்புணர்வு எப்படி இருந்தது” என்று பிரதமர் கேட்க, “மக்கள் தற்போது தூய்மை குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்” என்று பதிலளித்தார். தொடர்ந்து, “உடல் செயல்பாடுகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கிறீர்கள்” என்று கேட்ட, “4 முதல் 5 மணி நேரம் வரை செய்வேன்” என்று கூறிய அங்கித், “நீங்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்துத்தான் எனக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது” என்கிறார்.

அதற்கு பிரதமர் மோடி, “நான் அதிக உடற்பயிற்சி செய்வதில்லை. எனது அன்றாடச் செயல்பாடுகளைச் செய்யத் தேவையான போதுமான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்கிறேன். அதேசமயம், நான் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறேன். எனது வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாத இரண்டு விஷயங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று, உணவு உண்ணும் நேரம். இரண்டாவது, தூக்கம். நான் தூக்கத்திற்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும். ஆனால் அது என்னால் முடியவில்லை” என்கிறார்.

இதைத் தொடர்ந்து, அங்கித் கூறுகையில், “சமூக வலைதளங்களில் பல இளைஞர்கள் தங்களது செயல்பாடுகளைப் பின்தொடர்வதை கவனித்தேன். விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டு வீரர்களுடன் நிற்பதற்காகவும் உங்களை பாராட்டுகிறேன். நான் முன்பு ஒரு விளையாட்டு வீரனாக இருந்தேன். ஆனால், காயங்கள் காரணமாக தற்போது விளையாட்டிலிருந்து விலகி இருக்கிறேன். விளையாட்டு வீரர்கள் பதக்கம் வெல்லும்போது நீங்கள் தனிப்பட்ட முறையில் அவர்களை அழைத்து பாராட்டுவதை நான் பார்த்தேன். ஃபிட் இந்தியா மற்றும் கேலோ இந்தியா முன்முயற்சிகள் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கின்றன” என்கிறார்.

நிறைவாக, பிரதமர் மோடி அங்கித்திடம் 75 நாள் சவால் என்ன என்று கேட்கிறார். அதற்கு, “நான் 5 விதிகளைப் பின்பற்றுகிறேன். முதலில், உட்புறம் மற்றும் வெளிப்புறம் என ஒரு நாளைக்கு இரண்டு முறை உடற்பயிற்சி செய்கிறேன். அடுத்ததாக, நான் நாள்தோறும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். மூன்றாவதாக, ஒரு புத்தகத்தில் 10 பக்கங்களை படிக்கிறேன். முதலில், நான் ஸ்ரீமத் பகவத் படித்தேன். இப்போது நான் சிவபுராணம் படித்து வருகிறேன். நான்காவதாக, நான் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறேன். நிறைவாக, என்னுள் இருக்கும் முன்னேற்றத்தை ஆவணப்படுத்த ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி, பிரதமர் மோடியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.

 

Today, as the nation focuses on Swachhata, Ankit Baiyanpuriya and I did the same! Beyond just cleanliness, we blended fitness and well-being also into the mix. It is all about that Swachh and Swasth Bharat vibe! @baiyanpuria pic.twitter.com/gwn1SgdR2C

— Narendra Modi (@narendramodi) October 1, 2023

 

Tags: PM Modidelhiswatch bharath
ShareTweetSendShare
Previous Post

பாஜக நிர்வாகி திடீர் கைது – நிர்வாகிகள் கண்டனம்!

Next Post

25,000 பேரின் ஓட்டுநர் உரிமம் அதிரடி ரத்து – என்ன காரணம்?

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies